Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கந்தசாமி கோவிலில் தைப்பூச ... கடம்பன்துறையில் 16ல் தைப்பூச விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலையைத் தேடி அலையாதீர்கள்.. வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2014
10:01

புதுார்: பட்டதாரி இளைஞர்கள் வேலை தேடி அலையக் கூடாது. வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், என, ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் பேசினார். மதுரை ரிசர்வ்லைன் ராமகிருஷ்ண மடத்தில், சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி விழா, இளைஞர் தின கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா ராமகிருஷ்ண மடத்தில் நடந்தது. மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் தலைமை வகித்து பேசியதாவது: இந்தியாவின் வீரத்துறவி எனப்படும் சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் பெருமையையும், இந்து மத இறையாண்மையையும் உலகிற்கு உணர்த்தியவர். இளைஞர்கள் இந்தியாவின் இரும்புத்துாண்கள், அவர்கள் இந்தியாவுக்கு ஆதாரமாகவும், உறுதியாகவும் உள்ள ஆணிவேர்கள் என்பதை உணர்த்தியவர் விவேகானந்தர். பணம் சம்பாதிக்கும், இயந்திர மயமான கல்வியை சுவாமி விவேகானந்தர் விரும்பவில்லை. மூளைக்குள் பல விஷயங்களை திணித்து வைப்பது கல்வியல்ல. பட்டதாரிகள் வேலையைத்தேடி அலையக்கூடாது. அவர்கள் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், என்றார். அவர் கூறிய கருத்துக்கள் அனைவருக்கும் பொருந்தும். இதனால்தான் உலக நாடுகள் அவரது ஜெயந்தி விழாவை கொண்டாடுகின்றன. இங்கிலாந்து, மலேசியா, இலங்கை நாடுகள் விவேகானந்தர் தபால் தலை வெளியிட்டு, சிறப்பித்துள்ளன. இந்திய அரசு 4 தபால் தலைகளும், நாணயங்களும் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 9 பல்கலைகளில் விவேகானந்தர் பற்றிய பாடப்பிரிவுகள் துவக்கவும், ஆராய்ச்சி மேற்படிப்பு துவங்கவும் அரசு உத்தரவிட்டு உள்ளது, என்றார். தினமலர் சார்பில் விவேகானந்தர் பற்றி பல்வேறு தலைப்புகளில் நடந்த கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை, விவேகானந்தர் கல்லுாரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணியன், தஞ்சாவூர், சாஸ்திரா பல்கலை பேராசிரியர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar