Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நாளை ... வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்: கருணை காட்டுமா ரயில்வே நிர்வாகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2014
11:01

ராஜபாளையம்: சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, மதுரை, செங்கோட்டை ரயிலை, இரவில் இயக்க, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மதுரை செங்கோட்டை ரயில் வசதி , தினமும் மூன்றுமுறை உள்ளது. பஸ் கட்டணத்தை விட, ரயிலில் மூன்று மடங்கு குறைவு. மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வசதியாக உள்ளது என்பதால், கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, மதுரை, திண்டுக்கல், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், சபரிமலைக்கு செங்கோட்டை ரயிலில் செல்கின்றனர். ஏற்கனவே கூட்டம் உள்ள ரயிலில், பக்தர்களும் செல்வதால், பெண்பயணிகள் நின்றுகொண்டே செல்லும் நிலை உள்ளது. பக்தர்கள் வசதிக்காக, இரவு சிறப்பு ரயில் இயக்க,தினமும் மாலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில், இரவு 8.30 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. அங்கேயே நிற்கும் ரயில், அடுத்தநாள் காலை 7.15 மணிக்கு, செங்கோட்டையில் இருந்து மதுரை புறப்படுகிறது. இதேபோல், செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில், மதுரைக்கு 7.15 மணிக்கு செல்கிறது. அங்கேயே நிறுத்தப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு, மீண்டும் செங்கோட்டை புறப்படுகிறது. இரவில், இரு ஸ்டேஷன்களிலும் நிற்கும் ரயிலை, சிறப்பு ரயில்களாக இயக்கினால், சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். இந்த சிறப்பு ரயிலில், செங்கோட்டை செல்லும் பக்தர்கள், அங்கிருந்து, தமிழக அரசு போக்குவரத்து கழகம், கேரள அரசு பஸ்கள் மூலம், பம்பை செல்லலாம். சுவாமி தரிசனம் முடிந்தபின், சிறப்பு ரயில் மூலம், தங்களது ஊர்களுக்கு திரும்ப வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ரமண பகவானின், 146ம் ஆண்டு ஜெயந்தி விழா, திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ... மேலும்
 
temple news
சேலம்; சேலத்தில், தத்வமஸி ஞானபீடம் சார்பில், அகில பாரத ஐயப்ப பக்தர்கள், 2 நாள் மாநாடு, நேற்று முன்தினம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: உலக நலன் வேண்டிஒன்பது வயது மாணவன், சிவன்மலை கோவிலின், 496 படிகளிலும் யோகாசனம் செய்தபடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar