Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அஷ்டாங்க பஞ்சாங்க நமஸ்காரம் ! அரைகுறையான பிரார்த்தனைகளால் பலன் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கொடுமையைக் கண்டு பயம் எதற்கு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2014
05:01

*மனிதனாகப் பிறப்பதில் பெருமையில்லை. மனிதப்பண்போடு வாழ்வதில் தான் அவனது பெருமை அடங்கியிருக்கிறது. உயர்ந்த சிந்தனையுடன் நற்செயல்களைச் செய்பவனே மனிதர்களில் சிறந்தவன்.
*நம் மனதில் வளர்க்கும் ஆசை எண்ணங்களே, நம்மை வண்டிச்சக்கரம் போல, பிறப்பிலும் இறப்பிலும் ஈடுபட்டு சுழலச் செய்கின்றன.
*கடவுளின் அருட்கொடையே மனிதப்பிறவி. அதைக் கொண்டு கடவுளுக்குத் தொண்டு செய்ய வேண்டும். வெறும் பட்டம், பதவி, பணம் போன்ற விஷயங்களை மட்டும் தேடிக் கொண்டிருப்பது கூடாது.
*கடவுளை அடையும் நோக்கத்துடன் வாழ்பவர்களே சான்றோர்கள். உலகியல் ஈடுபாட்டுடன் பணம் தேடும் மனிதர்கள் அனைவரும்
சாதாரணமானவர்கள் தான்.
*உயர்ந்த குறிக்கோளை ஏற்படுத்திக் கொண்டு மனிதன், அதை நோக்கி முன்னேற வேண்டும். குறிக்கோள் இல்லாத மனிதனை மிருகம்
என்று தான் சொல்ல வேண்டும். கடவுளின் அருளைப் பெறுவது மட்டுமே மனித வாழ்வின் குறிக்கோள்.
*வாழ்க்கையைத் தாங்கும் நான்கு தூண்களாக இருப்பது மாதா, பிதா, குரு, தெய்வம்.
*பிறப்பினால் உயர்வு, தாழ்வு கருதுவது கூடாது. ஜாதி, இனம் போன்ற பிரிவுகள் நாட்டை பாழ்படுத்தும் பேய், பூத, பிசாசுகள் என்று தான் சொல்ல வேண்டும்.
*உலகம் மாறிவிட்டது என்று சொல்வது கூடாது. உலகம் மாறிப் போகவில்லை. கடவுள் படைத்தது போலவே இருக்கிறது. மக்களின் மனம் தான் கெட்டுப் போய் விட்டது.
*செல்வம் சேர்க்க வேண்டும் என்று இன்றைய மனிதன் பேயாக அலைகிறான். செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்கிறார் குமரகுருபரர்.
*தனிமனிதன் மட்டுமில்லாமல் சமுதாயமே ஒழுக்கத்தைப் பேண வேண்டும். ஒழுக்கமற்ற எந்த சமுதாயமும் கறை படிந்த பக்கங்களையே தன் வரலாறாகக் கொண்டிருக்கும்.
*அமைதியில்லாத மாடமாளிகையை விட, நிம்மதி தரும் குடிசை மேலானது.
*முன்னேற்றத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. முயற்சிப்பவர் யாரும் அதை அடையாமல் இருப்பதில்லை.
* இளைஞர்கள் துணிவும், விவேகமும் கொண்டு, கடமையில் ஈடுபடுபவர்களாக விளங்கவேண்டும். இதனையே தைரியம் புருஷலட்சணம் என்பர்.
*மனிதனின் தலையாய கடமை உழைப்பது தான். உழைக்க மறுப்பவனை வறுமையும், பழியும் வந்தடைவது உறுதி.
*மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு மனவளமே அடிப்படை. பணபலம் இருந்தாலும், நல்லொழுக்கம், பக்தி போன்ற உயர்பண்புகள் இல்லாத மனிதன் சலிப்புக்கு ஆளாவது உறுதி.
*வாழ்வில் குறுக்கிடும் கொடிய பிரச்னைகளைக் கண்டு பயப்படக்கூடாது. துன்பத்தின் மூலம் தான் அனுபவ பாடமும், உழைப்பதற்கான
ஊக்கமும், மன உறுதியும், முன்னேறுவதற்கான வழியும் நமக்கு கிடைக்கிறது.
*சிறுவிஷயம் தானே என்று எதிலும் அலட்சியம் கொள்வது கூடாது. இதனால், பெரிய இழப்பை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகி விடும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar