Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இரவில் சந்திர நமஸ்காரம் செய்யும் ... மலர் மேல் மாருதி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அடிக்கிற கைதான் அணைக்கும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2014
03:01

*மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுக்கு ஆசைப்படாமல் கவனமாக இரு.
*உன்னை ஒருவன் சித்திரவதை செய்யும்போது கூட, அவனிடம் கடவுளைப் பார். அப்போது தான் உனக்கு உண்மை ஞானம் கிடைத்து
இருக்கிறது என உணரலாம்.
*மனதை தூய்மையாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு. அவரே உனக்குள்ளிருக்கும் தீமையை அகற்றி விடுவார்.
*உலகில் கடவுளின் பார்வைக்கு அற்பமானது என்று எதுவும்இல்லை. அதுபோல, உன் கண்களிலும் அற்பமானது என்று எதுவும் இருக்க கூடாது.
* விவேகமுள்ள சிறந்த நண்பன் கடவுள் மட்டுமே. ஏனென்றால் நம்மை எப்போது அடிக்க வேண்டும். எப்போது அணைக்க வேண்டும் என்பது நன்கு தெரியும்.
*சோர்வு உன்னை சோர்வடையச் செய்து விடக் கூடாது. அதிலிருந்து விலகி நின்று செயல்படக் கற்றுக் கொள்.
*உத்தமச் செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடியாகச் செய்து விடுவது நல்லது.
*பிறருக்காக வாழும் பொது நலப் பண்பே, மனிதனுக்கு நன்மையை அளிக்கும்.
*கடவுளின் அருளாட்சியில் தீமையென்று எதுவுமே இல்லை. நலம் அல்லது நலம் தருவதற்கான முயற்சியாகவே எல்லாம் இருக்கிறது.
*அகங்காரத்தை அறவே ஒழித்தால் ஒழிய, கடவுளை நாம் அறிய முடியாது.
*ஆயிரக்கணக்கில் தடைகளையும், தோல்வியையும், துன்பத்தையும் சந்திக்காமல், வாழ்வில் நற்பேறுகளை அடைய முடியாது. தடைக்கற்களே படிக்கற்கள்.
*அன்பால் செய்யும் செயலே உயர்வானது. சிறிய எறும்பின் உயிரைக் காப்பது, ஒரு பேரரசை நிறுவுவதை விட மேலான செயல்.
*தியாகம் செய். ஆனால், தியாகம் செய்ய வேண்டும் என்பதற்காக இல்லாமல், கடவுளுக்காகவும், மனித குலத்திற்காகவும் செய்ய வேண்டும்.
*உன்னை நீயே சோதனைக்கு உள்ளாக்கு. அந்தப் போராட்டத்தால் உன் கீழ்நோக்கிய உந்துதல்களைத் தீர்த்து விடு.
*காலத்தைப் பற்றியோ, வெற்றி பெறுவதைப் பற்றியோ கவலைப்படாதே. உன் பங்களிப்பைச் சரியாகச் செய். கடமையைச் செய்வதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது.
*லட்சியத்தை அடைய விரைந்து செயலாற்று. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் உழைத்தாலன்றி நம் லட்சியத்தை அடைய இயலாது.
*செல்வத்தைப் பறைசாற்றிப் பெருமைப்படுவது கூடாது. உன் எளிமையையும், அடக்கத்தையும் பிறர் பாராட்ட வேண்டும் என்று எண்ணாதே.
*உன்னைக் கடவுள் நேசிக்கும்படி செய்ய உன்னால் இயலவில்லை என்றால் அவரை உன்னுடன் போரிடவாவது செய்ய வை.
*பிறருடைய குறைகளைக் கவனித்தலும், அவர்களைக் குறை கூறித் திரிவதும் தீமையை விளைவிக்கும்.
*வம்பளக்கும் குணத்தை விட்டுவிடு. சாதனைக்கு எப்போதும் அது தடையாகவே இருக்கிறது.
*உன் மனதை வேண்டுமானால் சந்தேகிக்கலாம். ஆனால், கடவுள் உன்னை வழிநடத்துகிறார் என்பதில் சந்தேகம் கொள்வது கூடாது.
*உன்னுள் இருந்து வெளிப்படும் எண்ணம், சொல், செயல் என ஒவ்வொன்றும் கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையாக இருக்கட்டும்.
*மாவில் கலக்கும் உப்பு போல, உயிர்கள் மண்ணோடு மண்ணாகி விடும். அதனால், நல்லதையே சிந்தியுங்கள்.
*சில சமயத்தில் தனி ஒருவரின் வாழ்க்கை, பூமியின் விதியையே நிர்ணயிக்கிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar