பதிவு செய்த நாள்
28
பிப்
2014
11:02
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடி குரு பரிகாரஸ் தல மான இங்கு நேற்று மாசி மகா குருவாரா விழாவில் மேஷம், மிதுனம், கட கம், மீனம், கன்னி,விருச்சிகம் மற்றும் மகர ராசிக் காரர் கள் பங்கேற்று சிறப் பு வழிபாடு நடத்தினர். தேவர்கள் பாற்கடலை கடைந்த போது ஏற்பட்ட நஞ்சினால் அவ தியு ற்றவர்கள், இறைவனை வழிபட சிவன் ஆலகால நஞ்சை இத்த லத்தில் குடித்து காத்தமையால் இவ்வூருக்கு ஆலங்குடி எனவும், இறைவனுக்கு ஆபத்சகா யேஸ் வரர் எனப் பெயர் வந்தது. தேவர்களுக்கு நேர்ந்த துன்பங்களை களைந்து காத்தமையால் வினாய கரு க்கு கலங்காமல் காத்த வினாயகர் என்ற பெயர் வந்தது. மேலும் அம்பிகை இத்தலத்தில் தவம் செய்து திருணம் செய்து கொண்ட சிறப்பை உடையது. ஆதிசங்கரர் இத்தல குரு பகவானை தரிசித்து சிவஞானம் பெற்றார். இந்திரன், விசுவாமித்திரர், சகபிரம்ம மகரிஷி அகஸ்தியர் முதலானோர் வழி பட்டடுள்ளனர். நாவுக்கரசர் மற்றும் சம்மந்தரால் பாடல் பெற்றது.
இச்சிறப்பு மிக்க இக்கோவில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ளது. இங்கு வியாழன் தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் திருக் கோவி லை சுற்றியுள்ள அமிழ்த புஷ்கரணியில் நீராடி இறைவனை தரிசித்து குருடு, செவிடு நீங்கியும், புத்திரபாக்கியமும் பெற்றுள்ளனர். இக்கோவிலில் அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, கொடிமரம் மற்றும் எட்டுத் திசை பாலகர்களுடன் கூடிய வெளிபிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தும், வெளி பிரகாரத்தில் 24 நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவிலில் நேற்று மாசி மகா குருவாரவிழாவில் விழாயன் காலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் மேஷம், மிது னம், கடகம், மீனம்,கன்னி,விருச்சிகம் மற்றும் மகர ராசிக் காரர்கள் பங் கேற் று சிறப்பு வழிபாடு நடத்தினர்.