பதிவு செய்த நாள்
12
மார்
2014
01:03
கன்னி (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1.2)
ராசிநாதனான புதன் மார்ச் 28 வரையும், சுக்கிரன் மார்ச் 31 வரையிலும் நற்பலனை வழங்குவர்.புதனால் எடுத்த காரியம் வெற்றி அடையும்.வீட்டில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடக்கும்.பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால்வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.அலைச்சலும், அவப்பெயரும் உண்டாகலாம். உடல்நலனில் அக்கறை தேவை. வயிறுதொடர்பான உபாதைகள் வரலாம்.வீட்டுக்கு தேவையான சகல வசதியும்கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு கூடும். ஆனால் மார்ச் 28-ந் தேதிக்கு பிறகு மனக்கசப்பு வரலாம், விட்டுக் கொடுத்துப் போகவும்.தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிரியால் இடையூறு அவ்வப்போது வரும். ஆனாலும் எதிர்பாராத வகையில் வருமானம் வந்து சேரும்.பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம்காண்பர். தங்கள் கோரிக்கைகளை மார்ச் 28க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். ஏப்ரல் 6,7ல் எதிர்பாராத நற்பலன் கிட்டும். மார்ச் 31க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். கலைஞர்கள் நற்பெயர் கிடைக்க பெறுவர்.புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மார்ச் 31 க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியஇருக்கும். அரசியல்வாதிகள் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் சிறப்பானமுன்னேற்றம் காண்பர். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவர். நெல், கோதுமை, பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகள் மூலம்வருவாய் கிடைகும்.பெண்கள் கணவர்,குடும்பத்தினரின் அன்பை பெறுவர். மார்ச் 28க்கு பிறகு குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்துபோகவும். விரும்பிய படி புத்தாடை, அணிகலன் வாங்கலாம்.
நல்ல நாள்: மார்ச் 17,18,21,22,23, 28,29,30,31 ஏப். 6,7,8,9, 10,13
கவன நாள்: ஏப். 1,2 சந்திராஷ்டமம் கவனம்
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: வெள்ளை, பச்சை
வழிபாடு: துர்க்கை வழிபாட்டால் துன்பம் நீங்கி, தைரியம் பிறக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். குருவுக்குரிய தலம் ஒன்றுக்கு சென்று வரலாம்.