பதிவு செய்த நாள்
12
மார்
2014
01:03
சிம்மம் ( மகம், பூரம், உத்திரம் 1)
மாதத்தின் பிற்பகுதியில், குடும்ப பிரச்னைஅடியோடு மறையும். மார்ச் 28க்கு பிறகு புதன்நற்பலன் கொடுப்பார். மனதில் உற்சாகம்உண்டாகும். குரு,சனி,ராகு மாதம் முழுவதும்நற்பலனை வழங்குவர்.மாதத் தொடக்கத்தில் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் கணவன், மனைவி இடையே மனக்கசப்பு வரலாம். மார்ச் 28க்கு பிறகு முயற்சியில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன்கள்வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும்பெருமையும் கிடைக்கும். தம்பதியிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை சீராகும். சூரியனால் அரசு வகையில் நன்மை இருக்காது. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். உடல் நலம் பாதிக்கலாம் தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பின் பேரில் வருமானம் பெருகும். மாதத்தின் பிற்பகுதியில் வியாபாரம் சிறக்கும். பணியாளர்கள்அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். அதிக சிரத்தை எடுத்தால் தான் எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். அலைச்சல் இருக்கும். வேலைநிமித்தமாக மனைவியை பிரிந்து இருப்பவர்கள் மார்ச் 28க்கு பிறகு ஒன்று சேர வாய்ப்புண்டு.கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ் பெறுவதில் தாமதம் ஆகலாம். புதிய ஒப்பந்தம் முயற்சியின் பேரில் தான் கிடைக்கும். சுக்கிரன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் மனதில் சோர்வும் ஏற்படும். மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு பெண்களால் தொல்லை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள் சுமாரான பலனையே காணமுடியும். மாணவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மார்ச் 28-ந் தேதிக்கு பிறகு, முன்னேற்ற பாதையில் செல்வர்.விவசாயிகளுக்கு தேவையான வருமானம் கிடைக்காமல் போகலாம். ஆனால் காய்கறி, கீரை வகைகளில் சிறப்பான மகசூல் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர்.
நல்ல நாள்: மார்ச் 15,16,19,20,26,27,28,29, ஏப். 3,4,5,6,7,11,12
கவன நாள்: மார்ச் 30,31
அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: மஞ்சள், கருப்பு
வழிபாடு: பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சைபழ விளக்கு ஏற்றி வணங்கி வாருங்கள். செவ்வாயன்று முருகன் கோவிலுக்கும் சென்று அர்ச்சனை செய்யுங்கள்.