பதிவு செய்த நாள்
12
மார்
2014
01:03
விருச்சிகம் (விசாகம் 4 அனுஷம், கேட்டை)
ராசிநாதனான செவ்வாய், சுக்கிரன்,கேதுஆகியோரால் நன்மை தொடர்ந்து கிடைக்கும். புதன் மார்ச் 28 வரை நற்பலனை கொடுப்பார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிந்தித்து செயல்படவும். பொருளாதார வளம் பாதிக்காது. தடைகளை சந்தித்தே எந்த செயலையும் நிறைவேற்ற முடியும். கணவன், மனைவி இடையே அன்பு மலரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்குஅதிகரிக்கும். மார்ச் 30க்கு பிறகு சமூகத்தில் மதிப்பு கூடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். உடல்நலம் சீராக இருந்தாலும், அவ்வப்போது பிரச்னை தலைகாட்டலாம்.தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமை ஏற்பட்டாலும், பொருளாதார வகையில் எந்த பின்தங்கிய நிலை உருவாகாது. புதிதாக முதலீடு செய்ய வேண்டாம். மார்ச் 27க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர்பயணம் ஏற்படலாம்.பணியாளர்கள் தொடர்ந்து சிறப்பான பலனைக் காணலாம். அதிகாரிகளின்ஆதரவு கிடைக்கும். பணிச்சுமை குறையும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். கலைஞர்களுக்கு புகழும் பாராட்டும் கிடைக்கும். புதிய ஒப்பந்தம்கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு அமையப் பெறுவர்.மாணவர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். தேர்வில் மதிப்பெண் உயரும்.விவசாயிகள் ஆடு, மாடு மூலம் நல்ல வளம் காண்பர். பால் தொழிலில் லாபமுண்டு. வழக்குவிவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். பெண்களுக்கு மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகள் வளர்ப்பில் மகிழ்ச்சி அடைவர். நகை-ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
நல்ல நாள்: மார்ச் 15,16,17,18,21,22,23,26,27, ஏப். 1,2,3, 4,5,11,12,13
கவன நாள்: ஏப்ரல் 6,7 சந்திராஷ்டமம் கவனம்.
அதிர்ஷ்டம் எண்: 7,9 நிறம்: வெள்ளை,சிவப்பு
வழிபாடு: சனிக்கிழமை சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகு சாதகமற்ற இடத்தில் இருப்பதால்அவருக்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.