பதிவு செய்த நாள்
12
மார்
2014
01:03
தனுசு (மூலம் பூராடம், உத்திராடம் 1)
சூரியன் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை வேண்டாம். புதன் மார்ச் 28ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். குரு,சனி,ராகு, சுக்கிரன்ஆகியோர் தொடர்ந்து நற்பலன் வழங்குவர். எந்த ஒரு செயலையும் விரைந்து செய்வீர்கள். கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 10-ல் இருப்பதால் எதிரி தொல்லை ஏற்பட்டாலும் முறியடித்து விடுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மார்ச் 30க்கு பிறகு பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்கள் உறு துணையாக இருப்பர். சூரியனால் உடல் உபாதை அவ்வப்போது வரலாம்.தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். மார்ச் 27 வரை அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். பதவி உயர்வுக்கு தடை வராது. ஆனால் உங்கள் திறமைக்கு ஏற்ப பலன் கிடைக்கும். பெண்கள் வகையில் ஒதுங்கி இருக்கவும்.விவசாயிகளுக்கு மகசூல் சிறக்கும். என்ன பயிர் செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை ஒத்தி போடுங்கள்.மாணவர்கள் மந்த நிலையில் இருந்து விடுபடுவர். மார்ச் 27க்கு பிறகு புதனால் கல்வி வளம்கிடைக்கும். ஆசிரியரின் வழிகாட்டுதல் கிடைக்க பெறுவீர்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புகழ் பாராட்டு கிடைக்கும். சிலருக்கு அரசிடம் இருந்து விருது வரலாம். அரசியல்வாதிகள் எதிர் பார்த்த பதவி கிடைக்கும்.பெண்கள் குடும்பத்தரிடம் நன்மதிப்பை
பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமைகிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.
நல்ல நாள்: மார்ச் 17,18,19,20,24,25,28,29, ஏப். 3,4,5,6,7,13
கவன நாள்: ஏப் 8,9,10 சந்திராஷ்டமம் கவனம்
அதிர்ஷ்ட எண்: 1,7 நிறம்: கறுப்பு, மஞ்சள்
வழிபாடு: மாரியம்மன், முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். மார்ச் 28-ந் தேதிவரை குலதெய்வத்தைவழிபட்டு ஏழைகளுக்கு பச்சைப்பயறு தானம் செய்யலாம்.