Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நஞ்சுண்ட ஈஸ்வரர் கோவில் பங்குனி ... துவாரகா பாபா கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கமேஸ்வரர் கோவிலில் பரிகார மண்டபம் கட்டும் பணி தீவிரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2014
11:03

பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவில் பின் பகுதியில் பக்தர்களின் வசதிக்காக, புதிய பரிகார மண்டபம் கட்டும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. பவானி சங்கமேஸ்வரர் கோவில், தென்னகத்தின் காசி என அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் பின்புறம், மூன்று நதிகள் ஓடுவதால், அங்குள்ள காவிரியை கூடுதுறை என்பர். இங்கு ஆண்டு முழுவதும் உள்ளுர், வெளியூர் பக்தர்கள் வருகை தந்து, முக்கூடல் சங்கமத்தில் புனித நீராடி, தங்கள் குடும்பத்தில் இறந்த முதியோர்களுக்கு தர்பணம், திதி, பரிகாரம் போன்றவைகளை செய்து, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக, கூட்டம் அதிகமாக காலங்களில், ஏற்கனவே உள்ள பரிகார மண்டபத்தில் இடநெருக்கடி அதிகம் ஏற்படுவதால், காளகஸ்திரி மண்டபம், பழைய பரிகார மண்டபம் ஆகியவைகள் இடித்து கட்ட முடிவு செய்தனர். இதன்படி, அப்பகுதியில், மிக பெரிய அளவிலும், பிரமாண்டமான முறையில் 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஒரே நேரத்தில், 150 பேர் அமர்ந்து, பரிகாரம் செய்யும் வசதிகள் கொண்ட, 55 அடி நீளம், 60 அடி அகலம் கொண்ட, மிக பிரமாண்டமான பரிகார மண்டபம் கட்ட தீர்மானித்தனர். அரசின் அனுமதி பெற்று, புதிய பரிகார மண்டபம் கட்டுவதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன், பவானி எம்.எல்.ஏ., நாராயணன், நகராட்சி தலைவர் கருப்பணன், பவானி தொழில் அதிபர் பழனிசாமி, அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் சங்கமேஸ்வரர் கோவில் அதிகாரிகள், ஆன்மிகவாதிகள் ஆகியோர்கள் முன்னிலையில் பூமி பூஜையுடன், பணிகள் துவங்கியது. தற்போது, இப்பணிகள், 60 சதவீத நிறைவு பெற்றுள்ளது. தற்போது பரிகார மண்டபத்தின் மேல் பகுதியில், சுவாமி சிற்ப பணிகள் நடந்து வருகிறது. பக்தர்களுக்கு தேவையான தண்ணீர், மின்சார வாதி, கழிப்பிடம் போன்ற வசதிகள் செய்ய ஆலோசனை செய்யப் படுகிறது. மிக விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar