Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ... திருப்பூர் மாகாளியம்மன் கோயில் விழா: பெண்கள் பால்குட ஊர்வலம் திருப்பூர் மாகாளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி கோவிலில் ஸஹஸ்ர தீபாலங்கார சேவை இடம் மாற்றம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஏப்
2014
12:04

திருப்பதி: திருமலை வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தை இடித்து, 100 மீட்டர் இடைவெளி விட்டு, புதிய மண்டபத்தை கட்ட, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில், திருமலை ஏழுமலையான் கோவில் உள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். திருமலை - திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பக்தர்கள் வசதிக்கேற்ப, அவ்வப்போது, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, ஏழுமலையானின் ஊஞ்சல் மண்டபத்தைச் சீரமைக்கும் பணியை தேவஸ்தானம் துவங்க உள்ளது. கோவிலின் அக்னி மூலையில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தை இடித்து, புதிய மண்டபத்தை கட்ட, ஜீயர்கள், ஆகம பண்டிதர்கள் ஒப்புதல் அளித்ததால், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஊஞ்சல் மண்டபம் இடிக்கும் பணி துவங்கியது. கடந்த 2003, மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ், கோவில் எதிரில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப்பட்டு, மாட வீதிகள் அகலப்படுத்தப்பட்டன. அப்போது, அங்கிருந்த ஊஞ்சல் மண்டபத்தையும் இடித்து, உள்புறம் நகர்த்த தேவஸ்தானம் முடிவு செய்தது. அதற்கு, ஹதீராம்ஜி மடம், நிலம் அளிக்க மறுத்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதனால், பிரம்மோற்சவம் நடைபெறும் போது, தேரை திருப்ப மிகவும் சிரமமாக இருந்ததால், அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி, 100 மீட்டர் இடைவெளி விட்டு அமைக்க தேவஸ்தானம் திட்டமிட்டது. தற்போது, 1.8 கோடி கோடி செலவில் செய்யப்பட்டு வரும் தெற்கு மாட வீதி பணிகள் முடிவு பெறும் தருவாயில் உள்ளதால், ஊஞ்சல் மண்டபத்தை இடித்து, மாடவீதியை அகலப்படுத்தும் முயற்சியில், தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. இங்கு, தினமும் மாலை நடைபெறும், ஸஹஸ்ர தீபாலங்கார சேவை, இனி, வாகன மண்டபம் அருகில் உள்ள வைபவோத்ஸவ மண்டபத்தில் நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
அன்னூர்; மதுர காளியம்மன் கோவில் மண்டல பூஜை நேற்று நடந்தது.லக்கேபாளையம் கோவில் பாளையத்தில் 350 ஆண்டுகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் லட்சுமி நாராயண அஷ்டலஷ்மி கோவில் ஆதி பிரம்மனுக்கு அமாவாசை தாலாட்டு உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar