Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்ஷய திரிதியைக்கு காலடி செல்வோமா ? திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அபூர்வ நிகழ்ச்சி: லிங்கத்தின் மீது சூரிய ஒளி! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உசிலம்பட்டி சடையாண்டி கோயில் கிடா வெட்டு: பெண்களுக்கு அனுமதியில்லாத விழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஏப்
2014
05:04

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வின்னகுடி சடையாண்டி கோயிலில் கிடா வெட்டு விழா நடந்தது. பெண்களுக்கு அனுமதி இல்லாத இந்த விழாவில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு 50 க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி இரவு வழிபாடு நடத்தினர்.
வின்னகுடி கிராமத்திற்கு அருகே சடையாண்டி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த விரும்பும் சுற்றுவட்டார கிராமத்தினர் வின்னகுடி விநாயகர் கோயில் முன்பாக ஆட்டுக்கிடா வாங்கி நேர்ந்து விடுகின்றனர். இந்த கிடா சுற்றுப்பகுதி கிராமங்களில் எங்கு வேண்டுமானாலும் சென்று தங்கிவிடுகிறது. கிராம மக்கள் சடையாண்டி கோயில் கிடா என்றால் சாமி நம் இடத்திற்கு வந்துள்ளார் என கருதி வளர்க்கின்றனர். ஒரு ஆண்டு நிறைவு பெற்றதும் இந்த கிடாக்கள் அனைத்தும் வின்னகுடி விநாயகர் கோயிலுக்கு கொண்டு வருகின்றனர். சிறப்பு வழிபாடுகளுக்கு பின்பு கிடாக்கள் அருகில் உள்ள சடையாண்டி கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. இரவில் கிடாக்கள் வெட்டி பலி கொடுத்து வழிபாடு நடக்கும். இந்த இரவு வழிபாட்டில் பெண்களுக்கு அனுமதி இல்லை.
நேற்று முன்தினம் இரவு நடந்த வழிபாட்டில் 52 கிடாக்கள் பலியிடப்பட்டு வழிபாடு நடந்தது. சுற்றுப்பகுதி கிராம ஆண்கள் இரவு வழிபாட்டில் கலந்து கொண்டு கறிவிருந்து உண்டு சடையாண்டியை வழிபட்டு சென்றனர்.சொக்கத்தேவன்பட்டி கிருஷ்ணன் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கம் தொடர்கிறது. 100க்கும் மேற்பட்ட கிடாக்கள் வரும். இந்த ஆண்டு காலநிலை மாற்றத்தினால் ஏராளமான கிடாக்கள் இறந்து போனது. நேற்றைய வழிபாட்டில் 52 கிடாக்கள் பலி கொடுக்கப்பட்டன. மழை வரம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இந்த வழிபாடு நடக்கிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் புதிய பஸ்ம குளம் அமைக்க, நேற்று பூமிபூஜை போடப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலை ... மேலும்
 
temple news
புதுச்சேரி; சாரம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. சாரம் முத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar