Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் ... மழை பொழிய திருவாசகம் முற்றோதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நலன் வேண்டி திருவிளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2014
02:04

கருமத்தம்பட்டி : உலக நலன் வேண்டி, 1008 திருவிளக்கு பூஜை கருமத்தம்பட்டியில் நடந்தது.தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, முத்துக்கவுண்டன்புதுார் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் மற்றும் கொள்ளுப்பாளையம் மாகாளியம்மன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், உலக நலன், ஆன்மிக எழுச்சி வேண்டி, ஒன்பதாம் ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை சங்கோதிபாளையம் பிரிவில் நடந்தது. இயக்கத்தலைவர் சம்பத்குமார் வரவேற்றார். அலகுமலை ஸ்ரீ தபோவன நிறுவனர் சுவாமினி குகப்பிரியானந்த சரஸ்வதி பேசுகையில், பெண்களால்தான் நாட்டில் ஆன்மிக எழுச்சியை உண்டாக்கமுடியும், என்றார்.ஆன்மிக பேச்சாளர் மகேஸ்வரி சற்குரு விவேகானந்தரும் இந்திய பெண்மையும் எனும் தலைப்பில் பேசுகையில்,சிறுவயது முதலே விவேகானந்தரின் மனதில் நல்ல எண்ணங்களை விதைத்தவர் அவரது தாயார் புவனேஸ்வரி. சுவாமிஜியின் கொள்கைகளையும், ஆன்மிக கோட்பாடுகளையும் நாடு முழுக்க பரப்பிய சீடர் நிவேதிதா. அயல்நாட்டை சேர்ந்தவராயினும் இந்துமதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு சுவாமிஜியின் சீடரானவர். அவரைத்தான் நமது மகாகவி பாரதியார் தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டார். அவர்களை போன்ற எத்தனையோ பெண்கள் தியாக சீலர்களாக வாழ்ந்துள்ளனர். அவர்களை பற்றி நமது குழந்தைகளுக்கு கூறி வளர்க்கவேண்டும், என்றார். *உலக நலன், ஆன்மீக எழுச்சி வேண்டி, ஒன்பதாம் ஆண்டு 1,008 திருவிளக்கு பூஜை சங்கோதிபாளையம் பிரிவில் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar