தேனி: கண்ணகி கோவிலில் நடக்கும் சித்ரா பவுர்ணமி திருவிழாவின் போது, பிளாஸ்டிக் பொருட்களுக்கு, கேரள வனத்துறை தடை விதித்துள்ளது. தமிழக – கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில், மே 14ம் தேதி, சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது. விழாவிற்கு செல்லும் பக்தர்கள், தண்ணீர் பாட்டில்கள் உட்பட எந்த பிளாஸ்டிக் பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது. 5 லிட்டர், 20 லிட்டர் குடிநீர் கேன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவை இலையில் கட்டி எடுத்துச் செல்லலாம்; பாத்திரத்தில் கொண்டு செல்லலாம்; பிளாஸ்டிக் பைகளில் கொண்டு செல்லக்கூடாது. குமுளியில் இருந்து கேரள வனத்துறை அனுமதி பெற்று இ0யக்கப்படும், ‘ஜீப்’களில் மட்டும் செல்ல வேண்டும். இதற்குரிய கட்டணத்தை, கேரள வனத்துறை நிர்ணயம் செய்துள்ளது. இரு மாநிலங்கள் சார்பில், மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.