Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சி கோவில்களில் மழை வேண்டி ... தமிழக முக்கிய கோயில்களில் மழைக்காக சிறப்பு யாகம்! தமிழக முக்கிய கோயில்களில் மழைக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜூனியர் தீமிதி திருவிழா: பாரம்பரியம் தொடர்கிறது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஏப்
2014
12:04

ஆர்.கே.பேட்டை : கிராமத்தினரின் கோஷ்டி பூசலால், 10 ஆண்டுகளாக தீமிதி திருவிழா கைவிடப்பட்டு உள்ளது. ஆனால், பாரம்பரியம் மாறாமல், சிறுவர்கள், திருவிழாவை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நேற்று காலை, 18ம் போர் அர்ச்சுணன் படுகளம் நடந்தது. ஆர்.கே.பேட்டை, அண்ணா நகரில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. கிராமத்தில் நீர் வளம், நில வளம் பெருக, அனைத்து தொழில்களும் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக, கோடையில், திரவுபதியம்மனுக்கு அக்னி வசந்த உற்சவம் நடத்தப்படும். விழாவின் போது, மகாபாரத பிரசங்கம், தெருக்கூத்து நடக்கும். அதில், வாழ்க்கைக்கு தேவையான தர்ம நெறிகள் விளக்கப்படும். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ஆர்.கே.பேட்டை மக்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டிபூசலால், திருவிழா நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது. ஆனால், தெருக்கூத்து, மகாபாரத நிகழ்வுகளால் கவரப்பட்ட சிறுவர்கள், தாங்களாக கோவில் அமைத்து, ஆண்டு தோறும் தீமிதி திருவிழா நடத்தி வருகின்றனர். கடந்த வாரம், சிறுவர்களின் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், வழக்கமான, ஜெய கொடி, அர்ச்சுணன் தபசு, வில் வளைப்பு, ராஜசுய யாகம், சொற்பொழிவு, தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்வுகள் இடம் பெற்றன. நேற்று காலை, 18ம் போர் அர்ச்சுணன் படுகளம் நடந்தது. இதில், பீமன், அர்ச்சுணன், காந்தாரி வேடமிட்டு சிறுவர்கள், போர் புரிந்தனர். மாலையில் தீமிதி திருவிழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar