பதிவு செய்த நாள்
05
மே
2014
11:05
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால் குடம் ஊர்வலம் நடந்தது.செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 14ஆம் ஆண்டு 9 நாள் மகா உற்சவம் மற்றும் 5ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 27ம் தேதி துவங்கியது. அன்று காலை 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு நவசந்தி காப்பும், இரவு சாமி வீதி உலாவும் நடந்தது. மாலை ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து 3ம் தேதி மாலை 1008 விளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை அம்மச்சார் அம்மன் கோவிலில் இருந்து பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் பெண்கள் 1008 பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பகல் 11 மணிக்கு செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாச பெருமாளுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. இரவு சாமி வீதி உலா நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, விழா குழு மகேஷ், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ் மற்றும் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இன்று காலை 9 மணிக்கு தேர்த் திருவிழா நடக்க உள்ளது.