திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திரவுபதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று தீமிதி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை வைத்து அம்மனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியல் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.