திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த சிங்கனூர் லக்ஷ்மி நாராயண ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் 3ம் ஆண்டு அன்னகூட திருப்பாவாடை மகா உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி மூலவர் ஸ்ரீனிவாச பெருமாள் திருப்பதி வேங்கடமுடையான் சிறப்பு அலங்காரத்திலும், தாயார், ஆண்டாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ மூர்த்திகள், ஆழ்வார்களுக்கு காலை 9 மணிக்கு நவகலச சிறப்பு திருமஞ்சனம், 10 மணிக்கு புஷ்பயாகம், நண்பகல் 1 மணிக்கு திருப்பாவாடை அன்னகூட மகா உற்சவம் நடந்தது. மதியம் 2 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை லக்ஷ்மி நாராயண ஸ்ரீனிவாச சேவா சமிதி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.