Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்ணகி கோயில், பாதைகள் சீரமைப்பு: ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரத்தில் பத்ரகாளிக்கு செலுத்தும் எலுமிச்சை மாலைகள் விலை உயர்வு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 மே
2014
01:05

திருப்புவனம்: எலுமிச்சை பழங்களின் விலை உயர்வால், சிவகங்கை அருகே மடப்புரம் பத்ரகாளியம்மனுக்கு, காணிக்கையாக செலுத்தும் எலுமிச்சை பழ மாலை, விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் சன்னதியில், வேண்டிய வரம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள உக்கிர தெய்வமான காளியின் கோபத்தை தணிக்க, பக்தர்கள் எலுமிச்சம் பழ மாலை சாத்துவது வழக்கம். இதனால், இங்குள்ள கடைகளில், பூக்களை விட, எலுமிச்சை மாலைகள் தான் அதிகம் விற்கப்படும். இங்கு, குறைந்தபட்சம் 11 பழங்கள் உள்ள சிறிய மாலை முதல் 1,001 பழங்கள் உள்ள பெரிய மாலை வரை விற்கப்படும். எலுமிச்சை பழங்களின் வரத்து அதிகம் இருந்த போது, ஒரு மாலை 50 முதல் 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது வரத்து குறைந்து விட்டதால், அதிக பட்சம் 1,001 பழங்களை கொண்ட பெரிய எலுமிச்சை மாலை, 4 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. விலை உயர்ந்த போதும், நேர்த்திக்கடன் செலுத்த வேண்டி, கூடுதல் விலை கொடுத்து வாங்கி, பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சை மாலையாக செலுத்துகின்றனர்.

இது குறித்து, வியாபாரி காந்தி கூறுகையில், " மதுரை, மார்க்கெட்டிற்கு பெங்களூரு, ஆந்திரா, கேரளா மற்றும் தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்து எலுமிச்சை பழங்கள் வரத்து இருந்தது. தற்போது, மழை இல்லாததால், வரத்து குறைந்துவிட்டது. வரத்து நன்றாக இருந்தபோது, ஒரு மூடை (40 கிலோ) எலுமிச்சை 1,800 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. தற்போது, 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாயாக விலைஉயர்ந்துள்ளது. லாரி வாடகை, ஏற்று இறக்கு கூலி, சம்பளத்தை கணக்கிட்டு, எலுமிச்சை மாலைக்கு விலை நிர்ணயிக்கிறோம், என்றார். மதுரை பக்தர் திருப்பதி கூறுகையில், " ஒரு வாரத்தில் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மடப்புரம் வந்து விடுவேன். அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றுவேன். தற்போது, விலை உயர்ந்துவிட்டது. இருந்தாலும்,நேர்த்தி செலுத்தும் நோக்கில், கூடுதல் விலை கொடுத்து வாங்குகிறேன்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar