Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கேதார்நாத்துக்கு அனுமதி ரத்து! பக்தர்கள் வெள்ளத்தில்.. ஆற்றில் இறங்கினார் அழகர்! பக்தர்கள் வெள்ளத்தில்.. ஆற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலுக்குள் மொபைல்: தகவல் தொடர்பு கட்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 மே
2014
06:05

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் கொண்டு செல்லும், மொபைல் போனுக்கு தகவல் தொடர்பு துண்டிக்க, 15 ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலியாக, கோயில் நான்கு ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார், தடை விதித்தனர். மேலும் கோயில் கிழக்கு, மேற்கு வாசலில் வெடிகுண்டு தடுப்பு போலீசார், பக்தர்களை தீவிர சோதனை செய்த பிறகே, கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, சென்னை ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடித்ததால், ராமேஸ்வரம் கோயிலில் பாதுகாப்பை பலத்தப்படுத்த மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி சில நாள்களுக்கு முன்பு, கோயிலுக்குள் பணிபுரியும் ஊழியருக்கு வாக்கி, டாக்கி வழங்கிட, மொபைல் டவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனைதொடர்ந்து, கோயிலுக்குள் மொபைல் போன் மூலம், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் முதல் பிரகாரத்தில், மொபைல் போனுக்கு தகவல் தொடர்பை துண்டிக்க, இரு சன்னதியை சுற்றி 20 மீட்டர் இடைவெளியில், 15 ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டது.

இதுகுறித்து கோயில் ஊழியர் கூறியதாவது: கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு மொபைல் போன் மூலம் அசம்பாவிதம் ஏற்படுத்துவதை தடுக்க, இரு சன்னதிகள், முதல் பிரகாரத்தில் பக்தர்கள் வைத்திருக்கும் மொபைல் போன் தகவல் இணைப்பு துண்டிக்க, 4.50 லட்சத்தில், 15 ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. எனவே, கோயிலுக்குள் பக்தர்கள் மொபைல் போன் எடுத்து செல்ல வேண்டாம் என, தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar