Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னவாசல் காளிகோயிலில் சித்திரைத் ... சைவ சமயப் பயிற்சி வகுப்பு தொடங்கியது
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகளுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 மே
2014
03:05

திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், நேற்று இரவு, பூசாரி கையால், திருநங்கைகள் தாலி கட்டிக்கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், கூவாகத்தில், கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு,  29ல், சித்திரை பெருவிழா துவங்கியது. 30ல், பந்தலடியில், ஊர் பிரமுகர்களுக்கு தாலிக் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு,  சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த திருநங்கைகள், பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இன்று காலை, 6:30 மணிக்கு, தேரோட்டம் துவங்குகிறது.  ருநங்கைகள் தேர் செல்லும் வழியில், 108 தேங்காய் வைத்தும், குவியல்களாக கற்பூரம் ஏற்றியும் கும்மியடிப்பர். தேரோட்டத்தின்போது, நிலங்களில் விளைந்த பொருட்களை விவசாயிகள் சுவாமி மீது வீசி, நேர்த்திக் கடன் செலுத்துவர்.தொடர்ந்து, நத்தம், தொட்டி வழியாக, தேர் பந்தலடியை சென்றடைகிறது. பகல், 12:00 மணிக்கு நடக்கும் அழுகளம் நிகழ்ச்சியில், திருநங்கைகள் தாங்கள் அணிந்திருந்த தாலிகளை அறுத்தெறிந்து, விதவைக் கோலம் பூண்டு ஒப்பாரி வைப்பர். பின், அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்துவிட்டு, ஊருக்கு திரும்புவர். மாலை, 5:00 மணிக்கு உறுமை சோறு (பலிசாதம்)  படையல் நடக்கிறது.  இதை வாங்கி சாப்பிட்டால், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  மாலை 7:00 மணிக்கு, காளிக் கோவிலில் அரவாண் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar