Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்சி சமயபுரம் கோவிலில் ... ஸ்ரீவி., கோயில் திடலில் கழிவுநீர்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயாறப்பர் ஸ்வாமி கோவில் பெருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2014
08:05

தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த திருவையாறிலுள்ள ஐயாறப்பர் ஸ்வாமி, சப்த ஸ்தான பெருவிழாவில் கோபுர தரிசனம் காணும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். தஞ்சை மாவட்டம், திருவையாறிலுள்ள அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் ஸ்வாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாக துவங்கியது. இதில், அறம் வளர்த்த நாயகி மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் திருத்தேரில் வலம் வந்து, ஐயாறப்பர் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இதன் முக்கிய விழாவாக திகழும் சப்த ஸ்தான பெருவிழா கடந்த, 14ம் தேதி துவங்கியது. இதனையொட்டி, அதிகாலை 5 மணிக்கு ஐயாறப்பர் ஸ்வாமி, அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு, கோபுர தரிசனம் கண்டனர்ர். இதனை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். தொடர்ந்து, ஐயாறப்பர் ஸ்வாமிகள் மேள, தாளங்கள் முழங்க, பக்தர்கள் கூட்டம் புடைசூழ, திருவையாறு நகரத்தை கோலாகலமாக வலம் வந்தார். இதனைத்தொடர்ந்து, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய இடங்களுக்கு பல்லக்கு சென்று, அந்தந்த கிராம பல்லக்குடன் சேர்ந்து, 6 ஊர் பல்லக்குகளும் நேற்று தில்லை ஸ்தானம் காவிரி ஆற்றங்கரையை அடைந்தது. அங்கு, தயாராக இருந்த தில்லை ஸ்தான பல்லக்குடன் சேர்ந்து, 7 ஊர் பல்லக்கு ஸ்வாமிகளை பக்தர்கள் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாட்டை தருமபுர ஆதீன கட்டளை விசாரணை குமாரசாமி தம்பிரான் தலைமையில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar