திருமலையில் தரிசனம் செய்ய 15 மணிநேரம் காத்திருப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2014 04:05
திருப்பதி: கோடை விடுமுறையால் திருமலைக்கு பக்தர்கள் வருவது அதிகரித்து உள்ளது. திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய நேற்று பக்தர்கள் 15 மணி நேரம் வரை காத்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் 2 மணிக்கு ரூ.300 விரைவு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு விரைவு தரிசனம் மீண்டும் தொடங்கியது.