Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதசார்பின்மை பற்றி ஆர்.பி.வி.எஸ். ... திருவாரூர் ஆலங்குடி கோவிலில் குருபெயர்ச்சி விழா! திருவாரூர் ஆலங்குடி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி வைகாசித் திருவிழா வைகையில் எழுந்தருளிய கள்ளழகர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2014
10:06

பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில், வைகாசி பவுர்ணமி வசந்தோத்சவ திருவிழாவை முன்னிட்டு ஜூன் 12 நள்ளிரவில் பெருமாள் "கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்பப்பல்லக்கில், பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன், வைகை ஆற்றில் இறங்கினார்.நேற்று காலை 7 மணிக்கு மேலச்சத்திரம் மண்டகப்படியை அடைந்தார். பின்னர் அங்கிருந்து காலை 10 மணிக்கு, பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, பரமக்குடி வீதிகளின் வழியாக வந்து, மாலை 5 மணிக்கு வைகை ஆற்றில், ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து இரவு நயினார் கோவில் ரோட்டின் வழியாக ஜீவாநகர், மகாலெட்சுமி என அனைத்து நெசவாளர் காலனிகளுக்கும் சென்று, நள்ளிரவு 1மணிக்கு வண்டியூர் அடைந்தார். அங்கு சந்தனக்காப்பு சேவை நடந்தது. இன்று (ஜூன் 14) இரவு 7 மணிக்கு பெருமாள் சேஷ வாகனத்தில் அலங்காரமாகி, மாணிக்கா மண்டகப்படியில், மண்டூக மகரிஷிக்கு (தவளை உருவம்) சாபவிமோசனம் அளிக்க உள்ளார். தொடர்ந்து கருட, அனுமார் வாகனத்தில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி அவதார சேவை சாதிக்க உள்ளார். ஜூன் 17 ல், மீண்டும் அழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இருந்து, மறுநாள் காலை கோயிலுக்கு எழுந்தருளுகிறார். இரவு கண்ணாடி சேவை நடைபெறுகிறது. ஜூன் 20 இரவு கருட சேவையுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபையினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar