Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி கோயிலுக்கு ஆக்டோபஸ் படை ... மருதமலை கோவில் மலைப்பாதையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் உண்டியலை திறக்க முடியலை... அதிகாரிகள் ஏமாற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2014
12:06

வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோவில் உண்டியலை, திறக்க முடியாமல், அறநிலையத்துறை அதிகாரிகள் தவித்தனர். வால்பாறை நகரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி கோவிலில், உண்டியல் பணம் ஆறுமாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. இந்துஅறநிலையத்துறை துணை ஆணையாளர் அனிதா தலைமையில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டது. அதன் பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோவில் உண்டியலை திறக்க, முயன்றபோது பூட்டை திறக்க முடியவில்லை. இதனையடுத்து சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் மட்டும் திறக்கப்பட்டது, பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணினர். இதில் மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 170 பணம் மற்றும் 12.9 கிராம் தங்கம், 101.20 கிராம் வெள்ளி இருந்தது. துணை ஆணையாளர் அனிதா கூறுகையில், கோவிலுக்கு சொந்தமான கடைகளில், நீண்ட கால நிலுவையில் உள்ள தொகை ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 877ஐ விரைவில் வசூல் செய்யப்படும். பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கோவில் உண்டியல் பாதுகாப்பு கருதி, விரைவில் கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும், என்றார்.

அதிகாரியை மிரட்டிய பூக்கடை வியாபாரி:
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்த போது, அங்கு வந்த பூக்கடை வியாபாரி கருப்புசாமி,65, (முருகபக்தர்), கோவில் உதவிஆணையாளர் அனிதாவிடம், கோவில் உண்டியல் பணத்தை கோவில் திருப்பணிக்காகதான் செலவிட வேண்டும். தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை இங்கிருந்து எடுத்துச்செல்லக் கூடாது என்று கூறி, திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து அதிகாரிகள் போலீசுக்கு புகார் செய்ய முயன்ற போது, கோவில் நிர்வாகிகள் தலையிட்டு, சமாதானம் செய்தனர். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
கோவா; இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை, கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்கலி ... மேலும்
 
temple news
புதுடில்லி; புதுடில்லி, குருகிராம், வரசித்திவிநாயகர், சாரதாம்பாள் கோவிலில் பிராண பிரதிஷ்டை, ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி திருச்சனுார் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த சம்பகசஷ்டி விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar