சின்னசேலம்: சின்னசேலம் அருகே கல்லாநத்தத்தில் உள்ள அடிபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கல்வராயன் மலை அடிவாரத்தில் அடிபெருமாள் அலமேலுமங்கை கோவிலில் மாதத்தில் உள்ள அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. சனிக்கிழமை பூ ஜையை முன்னிட்டு 22 அபிஷேகங்கள், வெங்கடாஜலபதி அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. சேலம், கள்ளக்குறிச்சி, ஆத்துõர், விழுப்புரம் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.