Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாயூரநாத சுவாமி கோயில் ஆனி விழா ... ஆத்மநாதர் கோவிலில் மாணிக்க வாசகர் மகா குருபூஜை! ஆத்மநாதர் கோவிலில் மாணிக்க வாசகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோனியம்மன் கோவில் குடமுழுக்கு விழா: யாகசாலை பூஜைகள் இன்று துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2014
12:07

கோவை : கோவையின் காவல் தெய்வமான கோனியம்மனுக்கு ஜூலை 11ம் தேதி குடமுழுக்கு விழா நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. கட்டட, கட்டுமானம், வர்ணம்பூசுதல் உள்ளிட்ட அனைத்துப்பணிகளும் நிறைவடைந்து. குடமுழுக்குவிழாவுக்கு தயார் நிலையிலுள்ளது. கோனியம்மன் கோவில் ராஜகோபுர திருப்பணிக்கான அடிக்கல் 2007 அக்., 17ல் நாட்டப்பட்டது. மண் ஆய்வு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடந்தன. ஏழு ஆண்டுகளுக்குப்பின் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது, அதில் 9 செப்புக்கலசங்களுக்கு, ஆறு அடுக்குகளில் தங்கமுலாம் பூசப்பட்டு கோபுர கலசங்கள் அமைக்கப்பட உள்ளது. தரை மட்டத்திலிருந்து 93 அடி உயரத்துக்கு ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.இதில் 14 வரிசைகளில் கல்காரத்திருப்பணிகள் (27 அடி உயரத்துக்கு) அதற்கு மேல் 66 அடி உயரத்துக்கு சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராஜகோபுரதிருப்பணிக்காக ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பக்தர்கள் உபயமாக கொடுத்த தொகையிலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோனியம்மன் கோவில், ராஜகோபுர திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழக அரசின் ஒப்புதலை பெற்று, தற்போது கும்பாபிஷேக விழா, ஜூலை 11 ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை ஒட்டி கட்டட கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. குடமுழுக்கு விழாவின் முதல் நிகழ்ச்சி இன்று மாலை 5.00 மணிக்கு துவங்குகிறது. தமிழக அரசு விருது பெற்ற தருமபுரி ஜெயபாலனின் மங்கல இசையுடன் விழா துவங்குகிறது. சர்வசாதகர் ராஜப்பா குருக்கள் தலைமையில் சிறப்பு வேள்விகள் மற்றும் சிறப்பு பூஜைகள் இன்று மாலை 6.00 மணிக்கு துவங்குகிறது. கண்ணப்பன் ஓதுவார் குழுவினர், அகண்ட திருமுறை பாராயணம் செய்கின்றனர். இரவு 7.00 மணிக்கு, புதிய ராஜகோபுர அமைப்புத்தலத்தில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரவு 9.00 மணிக்கு திருநீறு, திருவமுது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை ஜூலை 4ம் தேதி சிறப்பு யாக வேள்விகள் காலை 7.00 மணி முதல் தொடர்கிறது. அதிக அளவில் வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் கோவில் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துவருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கங்கை நீரை சாதுக்கள் ... மேலும்
 
temple news
கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ ஆபத்சஹாய ... மேலும்
 
temple news
புதுச்சேரி; குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட ... மேலும்
 
temple news
நாகர்கோவில்;சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar