Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்டாள் கோயில் தேரோட்டம்: ஜூலை30ல் ... கோவையில் கம்பீரமாக உலா வந்த கோனியம்மன் தங்க கோபுரகலசங்கள்! கோவையில் கம்பீரமாக உலா வந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் மகா தரிசனம்: பல்லாயிரகனக்கான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2014
03:07

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி நடனமாடி வந்த நடராஜர் சுவாமி மகா தரிசனத்தை பல்லாயிரகனக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் மகோற்சவம் கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நேற்று சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி  தேரோட்டம் நடந்தது. தேரோட்டம் மாலை 6 மணிக்கு கீழ சன்னதியில் நிலைக்கு வந்தது. 8 மணிக்கு சுவாமி தேரில் இருந்து புறப்பாடு செய்து ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் எழுந்தருளினார். இதில் ஆயிரகனக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 9 மணிக்கு சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் ராஜசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனைகள்  நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் சுவாமி, அம்பாள் ஆயிரங்கால் உள்மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினார். இதனை வி.ஐ.பி.,க்கள் மற்றும் கட்டளைதாரர் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்தனர். காலை 11 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜைகள் நடந்தது. 12 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்து 1.15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் முன்பு எழுந்தருளினார்.

மதியம் 2.20 மணிக்கு மேளதாலங்களுடன், தேவாராம் பன்னிரு திருமுறை பாட, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் முன் மண்டபத்தில் ஆனந்த நடனமாடி வரும் ஆனித்திருமஞ்சனம் மகா தரிசனம் கண்கொள்ளாக் காட்சி நடந்தது. இதில் லட்கனக்கான பக்தர்கள்  “சிரசுக்கு மேல் கை கூப்பி வணங்கி கைளை தட்டி ஓசைகள் எழுப்பியும், தில்லை அம்பலத்தானே, ஆடல் வல்லானே” என கோஷம் எழுப்பி பக்தர்களும் ஆனந்த நடனமாடி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடராஜர் சுவாமி 21 படி வாசல் வழியாக சித்சபை பிரவேசம் செய்தார். சித்சபை முன்பு தீட்சிதர்கள், சுவாமியை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் செய்தனர். நடராஜர் சுவாமி தரிசனம் உற்சவத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரகனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar