Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் மகா தரிசனம்: ... சிவன்மலை கோவில் கும்பாபிஷேகம் அரோகரா கோஷம்  கோலாகலம்! சிவன்மலை கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் கம்பீரமாக உலா வந்த கோனியம்மன் தங்க கோபுரகலசங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2014
05:07

கோவை: கோனியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் ஸ்தாபிப்பதற்காக வேள்வியில் வைக்கப்பட்ட ஒன்பது ராஜகோபுரகலசங்கள் கோவை நகர வீதிகளில், கம்பீரமாக திருவீதி உலா வந்தது. பக்தர்கள் பயபக்தியோடு தங்கக்கலசங்களை தரிசனம் செய்தனர். கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவிலில், ஒன்பது தங்ககலசங்களோடு கூடிய ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையிலுள்ள தங்க நகை தயாரிப்பாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து, ராஜகோபுரத்தில் வைப்பதற்கான தங்கக்கலசங்களை கோவிலுக்கு சமீபத்தில் வழங்கினர். ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் ஸ்தாபிக்ககூடிய ஒன்பது கலசங்கள் ஒவ்வொன்றும் நான்கரை அடி உயரத்தையும், ஒன்னரை அடி அகலத்தையும் கொண்டது. இதில் ஆறு அடுக்குகளில் தங்கரேக்குகள் பதிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

Default Image
Next News

கோனியம்மன் கோவிலில் ஒன்பது கோபுரகலசங்களையும் வைத்து மலர்மாலைகள் அணிவித்து, வேள்விநடத்தப்பட்டது. வேள்வியில் வேதவிற்பன்னர்கள் வேதங்களை ஒத புனித தீர்த்தம் கோபுரகலசங்களின் மீது ஊற்றினர். அதன் பின்பு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்  தங்க கோபுரகலசங்கள் எழுந்தருளுவிக்கப்பட்டு, கோவிலிலிருந்து கோவை நகர வீதிகளில், தங்ககலசங்கள் வீதிஉலாவாக வந்தது. பெரியகடைவீதி, சலிவன்வீதி, கருப்பகவுண்டர்வீதி, ராஜவீதி, பெரியகடைவீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. நகர் முழுக்க வீடுகளின் முன்பு நின்று கொண்டிருந்த பக்தர்கள் ராஜகோபுரத்தில் அமையப்போகும் தங்க கலசங்களை இருகரம் கூப்பி வழிபாடு செய்தனர். இன்னும் சிலர் தேங்காய் பழம் வெற்றிலை, மங்கலப்பூக்களை நிறைத்து, கோபுரக்கலசங்களுக்கு சமர்பித்து வழிபாடு செய்தனர். ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் கான்கிரீ்ட் சிமெண்ட் பகுதி இனியும் தயார் நிலையில் இல்லாததால் கோபுரக்கலசங்களை கோபுரத்தின் மீது பொருத்தும் பணிகளை ஜூலை 9 ம் தேதிக்கு கோவில் நிர்வாகம் மாற்றம் செய்து வைத்துள்ளது. அன்றைய தினம் காலை கோபுரகலசங்கள் ஸ்தாபனம் செய்யப்படும். தங்கோபுர கலசங்கள் திருவீதி உலா நிகழ்ச்சியை ஒட்டி கோவில் மற்றும் தங்ககலசங்களுக்கு பலத்த போலீ்ஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar