Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாமம் பெயர்க்காரணம்! அரனின் ஐந்து வடிவங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
25 முக ஈசன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2014
04:07

ஈசனின் அறுபத்து நான்கு திருவடிவங்கள் சிறப்பானவை என்கின்றன புராணங்கள். அவற்றுள் ஒன்று மகா சதாசிவ மூர்த்தி வடிவம். இது சிவனின் ஞானமயமான வடிவினைக் குறிக்கும். எல்லாவற்றிலும் மேலானதாகவும், சிறந்ததாகவும், உயரிய தத்துவங்களைக் கொண்டதாகவும், சாதாரண மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத சதாசிவ வடிவம் விளங்குகிறது. சதாசிவனின் வடிவம் ஒருமுகம், இரண்டு முகங்கள், ஐந்து முகங்கள் கொண்டதாகவும், மகாசதாசிவ வடிவாக இருபத்து ஐந்து முகங்களுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளார். மகாசதாசிவ வடிவம் சிவனுடைய மற்றைய வடிவங்கள் போன்று எல்லா இடங்களிலும் அமைக்கப்படுவதில்லை. அத்துடன் இவ்வடிவம் கோயில்களில் இடம் பெறுவதும் மிக அரிதே. கோபுரங்களில் சுதை வடிவில் சதாசிவமூர்த்தி அமைக்கப்பட்டுள்ளதை தமிழ்நாட்டுக் கோயில்களில் காணலாம். ஐந்துமுகமுள்ள சதாசிவன், நான்கு திசைகட்கும் நான்கு முகங்களும், உச்சியில் ஒரு முகமாக ஐந்து முகங்களையும், ஒவ்வொரு முகத்திற்கும் மும்மூன்று கண்களையும் உடையவர். உச்சியிலுள்ள ஈசானமுகம் ஈசான திசையை நோக்கியதாகவும், பளிங்கு நிறம் கொண்டதாகவும் இருக்கும். கிழக்கிலுள்ள தத்புருஷ முகம் கிழக்கு திசையை நோக்கி கோங்கம் பூ நிறத்தினைக் கொண்டதாகவும், தெற்கிலுள்ள அகோரமுகம் வலது தோள்மேல் தெற்கு நோக்கி அவிழ்ந்த ஜடை, தாடி, கருப்பு நிறம், உக்கிர தோற்றத்தினை உடையதாகவும், வடக்கிலுள்ள வாமதேவமுகம் இடது தோள் மேல் வடக்கு நோக்கியதாகவும், சத்தியோசாத முகம் மேற்கு நோக்கியதாக பால் நிறமுடையதாகவும் இருக்கும். வலது கரங்களில் சூலம், மழு, வாள், வஜ்ஜிரம், அபயமுத்திரையும்; இடது கரங்களில் பாம்பு, பாசம், அங்குசம், மணி, வரதமுத்திரை முதலியவையும் கொண்டவர். சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்களும் பஞ்சபிரம்ம மந்திரம் என்றே சிவஆகமங்களில் குறிப்பிடப்படுகின்றன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar