ரமலான் காலங்களில் மட்டுமல்ல! தினமும் ஐந்து வேளை தொழுகை செய்யும் நல்ல பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த ஐந்து வேளையும் என்னென்ன?பஜ்ர்: அதிகாலை தொழுகை- சூரியன் உதயமாவதற்கு ஒருமணி நேரம் முன்னதாக தொழுவது.லுஹர்: மதிய தொழுகை- சூரியன் உச்சியில் இருந்து மேற்குநோக்கி சற்று சாய்ந்த பிறகு 5 நிமிடங்கள் கழித்து தொழுவது (உத்தேசமாக மதியம் 12.10 வாக்கில்)
அஸர்: பிந்திய மதியம்- சூரியன் உச்சியில் இருந்து மேற்கில் சாய்ந்ததும் அடிக்கும் வெயிலில் ஒரு பொருளின் நீளம், அதன் நீளத்தை விட ஒன்றரை மடங்காக (நிழல்) தெரியும் போது (உத்தேசமாக மாலை 4 மணி) தொழுவது.மஃக்ரிப்: பிந்திய மாலை- சூரியன் மறைந்ததும் சில நிமிடங்களில் தொழுவது (மாலை 6.30 மணியளவில்)இஷா: இரவு- படுப்பதற்கு முன் நிறைவேற்றும் தொழுகை.நோன்பு காலத்தில் மட்டுமல்ல! மற்ற நாட்களிலும் இதே கால அட்டவணைப்படி தொழுவோம். இறைவனின் கருணைக்கு பாத்திரமாவோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.20