பதிவு செய்த நாள்
09
ஜூலை
2014
02:07
ஊத்துக்கோட்டை : ஸ்ரீராமகுப்பம் கிராமத்தில் நடந்த, 23ம் ஆண்டு ஹரே ராம பஜனை நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊத்துக்கோட்டை அடுத்த, ஸ்ரீராமகுப்பம் கிராமத்தில் உள்ளது பட்டாபிராமர் கோவில். நேற்று முன்தினம், 23ம் ஆண்டு ஹரே ராம பஜனை நிகழ்ச்சி துவங்கியது. கடந்த, 7ம் தேதி சுவாமிக்கு துளசி பூஜை நடந்தது.நேற்று முன்தினம் காலை, 4:00 மணிக்கு ஆண்டாள் திருப்பாவை, விஷ்ணு சகஸ்ரநாமம், தொடர்ந்து கலச பூஜை, அகண்ட தீபம் ஏற்றுதல் ஆகியவை நடந்தன.காலை, 5:30 மணிக்கு ஹரே ராம பஜனை துவங்கியது. இங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக கோ பூஜை செய்து, பஜனையுடன் வீதி உலா வந்தது. மாலை, 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.நேற்றும் இதேபோன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.