பதிவு செய்த நாள்
10
ஜூலை
2014
11:07
சேலம்: சேலம், அம்மாபேட்டை மாரியம்மன் கோவிலில், நிறுவப்பட்டுள்ள புதிய கொடிமரத்துக்கான மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சேலம், அம்மாபேட்டை மாரியம்மன் கோவிலில், நிறுவப்பட்டுள்ள புதிய கொடிமரத்துக்கான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம், ஜூலை, 7ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் புனித நீர் தீர்த்த குடம் ஊர்வலம், பலி பூஜை, ரக்ஷ ஹோக்ன ஹோமம், திசா ஹோமம், மஹா வாஸ்து சாந்தி ஹோமம், முதல் கால யாக பூஜை, 108 மூலிகை திரவியம் ஹோமம் ஆகியன நடந்தது.நேற்று காலையில், மங்கள இசையுடன் இரண்டாம் கால பூஜை துவங்கியது. புதிய கொடிமரத்துக்கு துவஜ ஸ்தம்பம், பிம்பசுத்தி நாடி சந்தானம், ஸ்பரிசாஹூதி, மூலமந்தர ஹோமம், 108 மூலிகை திரவியம் ஹோமம் ஆகியன நடந்தது. தொடர்ந்து புதிய கொடிமரத்துக்கான மஹா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அன்னதானம் நடந்தது.