பதிவு செய்த நாள்
11
ஜூலை
2014
02:07
திருத்தணி : ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை சாய்நகரில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று காலை, 8:00 மணி முதல், காலை, 10:00 மணி வரை, மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தி, மாலை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இரவு, 8:30 மணிக்கு சேஜ் ஆரத்தி நடந்தது.அதே போல், திருத்தணி ஒன்றியம், தலையாரிதாங்கல் கிராமத்தில், புதியதாக கட்டப்பட்ட ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தியும், இரவு, 7:30 மணிக்கு சேஜ் ஆரத்தி நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.