Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷியாமளா தேவிக்கு இன்று மகா ... ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்! ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவிபட்டினம் நவபாஷான கடற்கரையில் சுகாதாரக்கேடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2014
11:07

தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவபாஷான கடற்கரை அசுத்தமாக காணப்படுவதால், அதில் புனித நீராடும் பக்தர்கள் முகம் சுழிக்கும் அவலம் உள்ளது. இங்கு நவகிரகங்கள் கடலுக்குள் அமைந்துள்ளதாலும், ராமபிரானால் பூஜிக்கப்பட்ட தளம் என்பதாலும் மிகவும் பிரசித்து பெற்று விளங்குகிறது. அத்துடன், திருமண தடை, சர்ப்ப தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷ பரிகாரங்களுக்கு இங்கு உடனடி தீர்வு கிடைப்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். தவிர, முன்னோர்களுக்கு தர்பணம், நவகிரக தோஷங்கள், முன்ஜென்ப பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, ஆயுள், கல்வி, செல்வம் பெருகவும் பல்வேறு பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது. மேலும், ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் இங்கு வந்து நீராடிய பின்னரே, வேறு தலங்களுக்கு சென்று வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த நவபாஷான கடற்கரை ஓரத்தில் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பறை கழிவுகள் நவக்கிரகம் அமைந்துள்ள நவபாஷான கடலில் கலப்பதுடன், பக்தர்கள் கழற்றி விட்டுசெல்லும் துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை உடனுக்குடன் அகற்றப்படாததால் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.

விழுப்புரம், ராமேஸ்வரம்சுந்தர்: நவபாஷான கடலுக்குள் பக்தர்கள் விட்டுசெல்லும் துணிகள், பிரசாத பொருட்கள், பூஜை பொருட்கள் ஆகியவைகள் உடனுக்குடன் அகற்றப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தவிர, கடற்கரையில் உள்ள கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுகளும் நேரடியாக கடலில் கலக்கின்றன. இதனால், கடல் மேலும் மாசுபடிந்து வருவதால் பக்தர்களை முகம் சுழிக்க வைத்து வருகிறது. பக்தர்களின் நலன் கருதி கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரையூர், சீனிவாசன்: வாகன கட்டணம், நடைபாதை கட்டணம் என, பக்தர்களிடம் அடுத்தடுத்து வசூலிக்கப்படுகிறது. ஆனால், நவகிரகத்தை சுற்றி உடைந்து துருப்பிடித்துள்ள இரும்பு கம்பிகளை கூட இன்று வரை மாற்ற நடவடிக்கை இல்லை. இதனால், பக்தர்கள் அச்சத்துடன் நவக்கிரத்தை சுற்றிவர வேண்டியுள்ளது. பக்தர்களுக்கு போதிய வசதி ஏற்படுத்திக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவிபட்டினம் ஊராட்சி தலைவர், ஜாகிர்உசேன்: பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் நவபாஷான கடற்கரை மேம்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரையில் தேங்கியுள்ள பொதுக் கழிப்பறை கழிவுகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அகற்றப்படுகின்றன. மேலும், நவபாஷான பகுதியில் உடைந்த கம்பிகளை மாற்ற ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. விரைவில் சீரமைக்கப்படவுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar