பதிவு செய்த நாள்
14
ஜூலை
2014
10:07
பொன்னேரி: பொன்னேரி வட்டம், நெற்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள, ஷியாமளா தேவி அம்மன் கோவிலில், இன்று (ஜூலை 14), மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (திங்கட்கிழமை – 14ம் தேதி) காலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால ய õக பூஜையும், ஹோமமும் நடைபெற உள்ளது. காலை 6:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கும்ப புறப்பாடும், அதை தொடர்ந்து விமான கும்பாபி÷ ஷமும், மூலஸ்தானத்தில் உள்ள ஷியாமளா தேவி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும், விசேஷ அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற உள்ளன. மாலை 5:00 மணிக்கு ஷியாமளா தேவி அம்மன் விசேஷ சாத்துபடி அலங்காரத்துடன் வீதியுலா நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, 48 நாள்கள், மண்டல அபிஷேக விழா நடைபெறும். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை நெற்குன்றம் கிராம மக்கள் செய்துள்ளனர்.