Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகனுக்கு ஆடு வாகனம் சாஸ்தா கோயிலில் ஏன் யானை வாகனம்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனைவியின் காலில் விழுந்த முருகன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2011
05:05

அருணகிரியார் திருப்புகழ் பாடல் ஒன்றில், வேடிச்சி காலி லன்று விழுவோனே என்று குறிப்பிடுகிறார். அதாவது, முருகப்பெருமான் தனது மனைவியான வள்ளியின் காலில் விழுந்தார் என்ற பொருளில் இப்பாடலை பாடினார். இதனை மேலோட்டமாக பார்த்தால் பொருள் புரியாது. உள்ளார்ந்து படித்தால் இதற்குள் இருக்கும் பொருள் விளங்கும்.வள்ளி, திருமாலின் மகள், இவள் முருகப்பெருமானின் மீது அதிக பக்தி கொண்டவள். தெய்வானையும் திருமாலின் மகள் தான். அவளும், முருக பக்தையே என்றாலும், தேவர்களை காத்ததற்காக அவளை இந்திரன் முருகனிடம் ஒப்படைத்து விட்டான். அவள் முருகனுடன் கலந்து விட்டாள். இது பயன் கருதி செய்த பக்தி வகையில் அடங்கும். ஆனால், வள்ளியம்மை பூமியில் தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஒன்றில் பிறக்கிறாள். முருகனைக் குல தெய்வமாகக் கொள்கிறாள். அவளை ஒரு பக்தையாகவே பார்க்கிறார் முருகன். அவளது பக்தியின் ஆழத்தைச் சோதிக்கிறார். எல்லா சோதனையிலும் அவள் வெல்கிறாள். பக்தன் இறைவனின் காலில் விழுவது போல, வள்ளியம்மையாகிய பக்தையின் காலில் அவளது பக்தியைப் பாராட்டி முருகன்  விழுந்து, அவளை ஆட்கொள்கிறார். அதாவது, தன்னிடம் பக்தி கொண்டவர்களை முருகன் ஆட்கொள்வார் என்ற பொருளில் அருணகிரியார் இப்பாடலை பாடினார். உலகுக்கே கொடுப்பவன் கண்ணன். அந்த கண்ணன் யாசகம் கேட்டு மகாபலியிடமும், கர்ணனிடமும் செல்லவில்லையா? அதுபோல், தான் இதுவும்! தெய்வத் திருவிளையாடல்களை மனிதத்துவத்துடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. தெய்வீக சிந்தனையுடன் மட்டும்தான் பார்க்க வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar