Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கைலாயத்தின் பனித்தூறல்! கட்டெறும்பிடமும் கருணை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கண்ணிலே அன்பிருந்தால்..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2014
05:07

*நன்மை நடந்தால் மகிழ்பவர்கள், தீமை நிகழ்ந்தால் இறைவன் இருக்கிறானா என சந்தேகிக் கின்றனர். ‘கடவுள் எப்படி இவ்வாறு தவறு நடக்க அனுமதிக்கிறார்?’ எனவும் கேட்கின்றனர்.
*உண்மையில் உலகில் நன்மை, தீமையென்று எதுவுமே கிடையாது. இன்று நன்மையாக தெரிவது, நாளை தீயதாகவும், இப்போது தீமையாக இருப்பது சிலகாலம் கழித்து நல்லதாகவும் மாறி விடும்.
*உலகில் நடக்கும் எந்த சிறிய செயலும் இறைவனுக்கு தெரிந்தே நடக்கிறது. அவருக்கு தெரியாமல் எதுவும் இம்மியளவு கூட, அசைவதில்லை. இயற்கையாக நிகழும் செயலை, நமது சிறிய அறிவிற்கு ஏற்ற வகையில் நல்லது என்றும், தீயது என்றும் பிரித்துப் பார்க்கிறோம்.
*நாம் காணும் ஒவ்வொன்றும் உள்ளத்தைப் பொறுத்தே அமைகிறது. மனம் நல்லதை நினைத்தால், பார்க்கப்படுவது தீயதாக இருந்தாலும், அதிலுள்ள நன்மை மட்டுமே தெரியும்.
*மனம் தீயவற்றை எண்ணி கொண்டிருக்கும்போது, நல்லதை பார்த்தாலும் தீயதாகவே தெரியும். மொத்தத்தில் அனைத்தும், அவரவர் பார்வைக்கு ஏற்பவே தெரியும். அனைத்தும் நன்மையாகவே நடக்க விரும்பினால், முதலில் மனதை நல்லதாக வைத்துக் கொள்ளுங்கள்.
*முற்றும் உணர்ந்த ஞானியின் மவுனத்தைக் காட்டிலும், சிறந்த உபதேசம் வேறொன்று கிடையாது.
*நுõல்களைப் படித்தாலும், பலருடைய உபதேசத்தைக் கேட்டாலும் கூட மனதில் தெளிவு உண்டாகாது.  சத்தியத்தை முழுமையாக அறிந்தவர்களுக்கு மட்டுமே தெளிவு கிடைக்கும்.
*மனம் உருகி கடவுளை வழிபட்டால், எத்தகைய கொடிய துன்பமும் நீங்கி விடும்.
*உங்களிடம் ஏதாவது நிறை இருக்குமானால், அதற்கு காரணம் கடவுளின் அருள் என்று நினையுங்கள். இதனால், ‘தான்’ என்ற அகம்பாவம் மறையும்.
*பணியில் குறை நேர்ந்தால், என்னுடைய முயற்சியின்மையே காரணம் என சொல்லுங்கள். இதனால், உங்களைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்புண்டாகும்.
*பக்தியோடு பாடி வழிபடுவதே அவருடைய அருளைப் பெற எளிய வழியாகும்.
*மனதில் தெய்வ நம்பிக்கை ஆழமாக இருந்தால், கண்ணில் அன்பு ஊற்றெடுக்கும். அப்போது, கல்லில் இருக்கும் தெய்வத்தோடும், நாம் பேசிஉறவாடலாம்.
*வேதம், சாதுக்கள், பசுக்கள் இவர்களை காப்பாற்றி விட்டால், உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் நன்மை உண்டாகும்.
* எந்த அளவுக்குப் பேச்சு குறைகிறதோ, அந்த அளவுக்கு மனம் ஒருமுகப்பட்டு தியானத்தில் ஈடுபடும்.
*தியானத்தில் ஈடுபாடு கொள்ள பொறுமையும், விடாமுயற்சியும் அவசியம் தேவை.
* விருப்பத்துடன் நம்மை முழுமையாக கடவுளிடம்ஒப்படைப்பதே சரணாகதி.
* முன்வினைப்பயனைப் பொறுத்தே நம் செயல்கள் அமைகின்றன. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
*மருந்து சாப்பிட குழந்தை மறுத்தாலும், தாய் வலுக்கட்டாயமாக கொடுப்பாள். அதுபோல, நல்ல விஷயங்களை சிறுவயதிலேயே குழந்தைகளிடம் நிர்பந்தமாக உண்டாக்க வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar