Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ... முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அந்தியூர் குருநாத ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழாவில் இன்று பூச்சாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2014
12:07

அந்தியூர்: அந்தியூரில் புகழ்பெற்ற குருநாத ஸ்வாமி ஆடிப்பெருந்தேர்த்திருவிழா, இன்று காலை, பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. ஆண்டு தோறும், ஆடி மாதம் வெகுசிறப்பாக, தேர்த்திருவிழாவுடன், மாட்டு சந்தை, குதிரை சந்தையும் நடப்பது, இக்கோவில் பண்டிகையின் தனிச்சிறப்பாகும். இன்று நடக்க உள்ள பூச்சாட்டுதலுக்காக, நேற்று இரவு, கோவிலில் இருந்து, குருநாத ஸ்வாமியை, வனத்துக்கு எடுத்து சென்றனர். அங்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. இன்று காலை, பூச்சாட்டுக்குப்பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு, மதியம், சுவாமி கோவிலை வந்தடையும். வரும், 30ம் தேதி கொடியேற்றுதலும், ஆகஸ்ட், ஆறாம் தேதி முதல், வனபூஜையும், வரும், 13 முதல், 16ம் தேதி வரை மாட்டு சந்தையுடன் கூடிய, தேர்த்திருவிழா விமரிசையாக நடக்க உள்ளது. மேலும், 13 முதல், 16ம் தேதி வரை நடக்க உள்ள மாடு மற்றும் குதிரை சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், மாடுகள், குதிரைகள், வெளிநாட்டு ஆடுகள், பறவை இனங்களும் விற்பனைக்காகவும், கண்காட்சிக்காகவும் கொண்டு வருவர். இவற்றை பார்க்க, ஆயிரக்கணக்கான மக்கள், பக்தர்கள் வந்து செல்வார்கள். கோவில் சந்தைக்கு கொண்டு வரப்படும் கால்நடைகளுக்கு, நீர் ஆதாரமாக விளங்கிய, கெட்டிசமுத்திரம் ஏரி, வறட்சியால் சொட்டு தண்ணீர் இல்லாமல் உள்ளது. இதனால், கோவில் நிர்வாகம் சார்பில், கூடுதலாக தண்ணீர் தொட்டிகள் அமைத்து, கால்நடைகளின் தாகத்தை போக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும், என கால்நடை வளர்ப்போர் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில், வீடு, வீடாக சென்று பிரசாதம் ... மேலும்
 
temple news
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வெங்கடாஜலபதி கோயில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; திருப்புத்துார் அருகே துவார் கிராமத்தில் 15ம் நுாற்றாண்டு கல்வெட்டை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar