மதுரை அருகிலுள்ள மடப்புரம் பத்ரகாளியாகக் காட்சி தருகிறாள். இந்த அன்னைக்கு எலுமிச்சை கனி மாலை மிகவும் விருப்பமானது. ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு செய்யலாம். பொங்கலிடுதல். மாவிளக்கு ஏற்றுதல் ஆகியவை முக்கிய பிரார்த்தனை. இங்கு காளி திரிசூலத்தை ஏவும் கோலத்தில் காட்சி தருகிறாள். தன்னை நம்பி வந்தோரைக் காக்கும் நோக்கில், தன் ஒரு காலை முன்னே வைத்து, துன்பப்படுவோருக்கு அருள் செய்ய ஆயத்தமாக நிற்கிறாள். அநீதிக்கு ஆளானவர்கள் ஆடிப்பூரத்தன்று அவளிடம் முறையிட்டால், நியாயம் பெற்றுத்தருவாள் மடப்புரத்தாள்.