Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ... பள்ளிப்பட்டு அய்யனாருக்கு ஊரணி பொங்கல் வழிபாடு! பள்ளிப்பட்டு அய்யனாருக்கு ஊரணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமணத்தடை நீங்க... சிறுவாபுரிக்கு வாங்க!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஆக
2014
11:08

திருமண தடைகளை எல்லாம் போக்கி, திருமணத்தை உரிய காலத்தில் நினைத்தபடி நடத்தி மகிழ்வு அடைய வகை செய்யும் சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலை நாடினால் பலன் உண்டாகும். இக்கோவில், சென்னைக்கு அருகே. 35 கி.மீ., தொலைவில், சென்னை-கோல்கட்டா நெடுஞ்சாலையில் சின்னம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது.

திருமண பிரார்த்தனை நிறைவேற, சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு தொடர்ந்து, 6 வாரமும் ஏதாவது ஒரு கிழமையில் வரவேண்டும். அப்படி ஆறு வாரமும் வரமுடியாத பக்தர்களுக்காக, வள்ளி மணவாள பெருமானுக்கு கல்யாண மஹோற்சவம் நடைபெறும். திருமண பிரார்த்தனைக்காக வந்துள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும், மணக்கோலத்திலுள்ள வள்ளி மணவாள பெருமான் முன்னிலையில் தரப்படும் மாலையை, திருமண மாலையாக கருதி அணிந்து கொண்டு. வலம் வரும் சுவாமியை பின் தொடர்ந்து வந்து வழிபட வேண்டும்.

இந்த பிரார்த்தனையை சிரத்தையுடன் முடித்துவிட்டு செல்பவர்களுக்கு. அடுத்த கல்யாண மஹோற்சவத்திற்குள். திருமணம் கைகூடுவது நிதர்சனமான உண்மை. இந்த வகையில், வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வள்ளி கல்யாண மஹோற்சவம், சிறுவாபுரி முருகன் புகழ்பாடும் அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவின் ஐந்தாம் ஆண்டு விழாவையொட்டி நடக்கிறது.

இக்குழுவினர், கடந்தாண்டு நடத்திய வள்ளி கல்யாண மஹோற்சவத்தில் பங்கேற்று, திருமணம் கைகூடியவர்கள், கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் மகிழச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, நடைபெறும் கல்யாண மஹோற்சவம் காலை 9 மணிக்கு அபிஷேகத்துடன் துவங்குகிறது; திருமண பிரார்த்தனைக்காக வருபவர்கள், கோவிலின் இடவசதியை கருத்தில் கொண்டு, காலை 7 மணிக்குள் கோவிலுக்கு வந்தால், ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும். விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நிரல்!

காலை
6 மணி : விநாயகர், ஆதிமூலவர் அண்ணாமலையார் அம்மன் அபிஷேகம்
6.30மணி : மூலவருக்கு அபிஷேகம்
7.30மணி : சிற்றுண்டி
9. மணி : வள்ளிமணவாள பெருமானுக்கு அபிஷேகம்
10 மணி : திருக்கல்யாணம்
11 மணி : சுவாமி புறப்பாடு
மதியம்
12. மணி கல்யாண விருந்து
கோசை நகரான் திருகயிலாய திருக்கூட்டம்- சிவப்பூத கணங்கள் இசைக்கும் திருக்கயிலாய இசை

மேலும் தகவல்களுக்கு: 044-24712173, 9940625308

அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு, சென்னை

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது ... மேலும்
 
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar