பதிவு செய்த நாள்
12
ஆக
2014
12:08
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ராதிகாரமண பக்த கோலாகலன் கோவிலில் வரும் 17ம் தேதி ஜெயந்தி பிரம்மோத்சவ விழா துவங்குகிறது. கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலை மையில் நடக்கும் விழாவின் முதல்நாள் காலை கொடியேற்றம், இரவு சுவாமி சேஷவாகனத்தில் வீதியுலா, ஜனநோத்சவ விழா நடக்கிறது. 18ம் தேதி காலை நந்தோத்சவம், இரவு 8 மணிக்கு பக்தகோலாகலன் அம்சவாகனத்தில் எழுந்தருளி உரியடி விழா மற்றும் வீதியுலா நடக்கிறது. 19ம் தேதி காலை வனபோஜனம், மாடுமேய்த்தலும், இரவு சிம்மவாகனத்தில் சுவாமி வீதியுலா, 20ம் தேதி ÷ காவிந்த பட்டாபிஷேகம், இரவு அனுமந்த வாகனத்தில் வீதியுலா, 21ம் தேதி காலை தானலீலை, இரவு பெருமாள் கருடவாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 22ம் தேதி காலை கருடவாகனத்தில் கோலாகலன் வீதியுலா, இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா, ராசலீலை நடக்கிறது. 23ம் தேதி காலை கிருஷ்ணப் பிரேமி சுவாமிகள் தலைமையில் ராதிகாரமண பக்த கோலாகலன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இரவு முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 24ம் தேதி காலை ராதிகா ரமண பக்த கோலாகலன் பல்லக்கில் வீதியுலா, இரவு குதிரை வாகனத்தில் வீதியுலா, நிகுஞ்÷ ஜாத்சவம் நடக்கிறது. 25ம் தேதி காலை ராதிகா ரமண பக்த கோலாகலன் அலங்கரித்த தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம், மாலை தீர்த்தவாரி, 26ம் தேதி காலை விடையாற்றி நடக்கிறது.