பதிவு செய்த நாள்
13
ஆக
2014
01:08
உத்திரமேரூர்: பெருநகர் கிராமத்தில், களரொளியம்மன் கோவிலில் ஆடி மாத தேர் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் அடுத்துள்ள, பெருநகர் கிராமத்தில் உள்ள களரொளியம்மன் கோவிலில், ஆடி மாத தேர் திருவிழாவையொட்டி, கடந்த, 10ம் தேதி
ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அதை தொடர்ந்து, அன்று இரவே அம்மன் குட ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும், 11:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து, அபிஷேக ஆராதனையும் நடந்தது. மதியம், 3:00 மணிக்கு கடா சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4:00 மணிக்கு, மலரால் அலங்கரிக்கப்பட்ட களரொளியம்மன் தேரில் அலங்கரிக்கப்பட்டு வீதி ஊர்வலம் வந்தார். அப்போது, பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், தேர் இழுத்தும் முதுகில் முள் போட்டு ஆகாயத்தில் தொங்கிய படியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். வீதி உலா வந்த அம்மனை, அப்பகுதி மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். இவ்விழாவில், பெருநகர் மற்றும் அதை சுற்றிலும் உள்ள மக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புடைய கோயில்கள் :