தேனி : தேனி அருகே வயல்பட்டி கண்ணபிரான் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.முல்லை நதிக்கரையில் இருந்து கண்ணபிரான் உருவச்சிலை தீர்த்தங்கள் எடுத்து அழைத்து வருதல், விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. கண்ணபிரானுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை வயல்பட்டி வேளாளப் பெருமக்கள் சங்கம், வ.உ.சி., இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.