அம்மன் பெயர் கொண்ட கோயிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2011 03:05
ஆலயம் என்றால் ஆண், பெண் இருவருமே சென்று வழிபாடு செய்யக்கூடிய இடம். ஆனால் கரூர் மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அருங்கரை அம்மன் கோயிலில் பெண்கள் சென்று வழிபட அனுமதியில்லை. பெண் குழந்தைகள் கூட கோயிலுக்கு வெளியே நின்று தான் இறைவனை வழிபட வேண்டும். இக்கோயில் அம்மன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிள்ளையாரே மூலவராக அருள்பாலிக்கிறார். பிள்ளையார் பிரம்மச்சாரி என்பதால் இப்படி வழிபாடு செய்யப்படலாம் என தல வரலாறு கூறுகிறது.