Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளாங்கண்ணியில் பேராலய ஆண்டு விழா! தீவனூர் கிராமத்தில் மகா சதுர்த்தி விழா! தீவனூர் கிராமத்தில் மகா சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்து நாள் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் துவங்கியது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஆக
2014
10:08

நாகர்கோவில்: பத்து நாள் தொடர்ச்சியாக நடைபெறும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நேற்று துவங்கியது. இதையொட்டி, வீடுகளிலும், பொது இடங்களிலும் மலர்களால் அத்தப்பூக்களம் அமைக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று திருவோணம். ’காணம் விற்றாவது ஓணம் கொண்டாடு’ என்பது பழமொழி. சிறிய தானியமான காணத்தை விற்றாவது எளிமையாக ஓணம் கொண்டாட வேண்டும் என்பதே இதன் பொருள். கேரளாவின் வசந்த விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. கேரளாவில் குறுநில மன்னனாக, வாய்மை தவறாமல் ஆட்சி செய்து வந்த மகாபலியை சோதிக்க விரும்பிய விஷ்ணு பகவான், வாமன அவதாரம் எடுத்து மன்னனிடம் சென்று 3 அடி நிலம் கேட்டார். ’தருகிறேன்’ என்று மன்னன் சொன்னதும், மலையாக வளர்ந்த விஷ்ணு முதல் அடியில் பூமியையும், 2 வது அடியில் ஆகாயத்தையும் அளந்து விட்டு, 3 வது அடிக்கு நிலம் கேட்ட போது தனது தலையை காட்டி, ’தருகிறேன்’ என சொன்ன சொல்லை காப்பாற்றினார், மகாபலி. அப்போது விஷ்ணுவிடம் கேட்டு பெற்ற வரத்தின் படி, ஆவணி திருவோண நாளில் மக்களை மகாபலி காண வருவதாக நம்பப்படுகிறது. ஆவணி அஸ்தம் நாள் முதல் 10 நாட்கள் இவ்விழா கொண்டாடப்படுகிறது. நேற்று அஸ்தம் பிறந்தை ஒட்டி பத்மனாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் அமைத்து, ஓணத்தை வரவேற்றனர். ஊஞ்சல் ஆடியும், பாட்டு பாடியும் ஓண கொண்டாட்டம் துவங்கியது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பங்கேற்றனர். இனி10 நாட்கள் கேரளாவிலும், அதை ஒட்டியுள்ள தமிழக எல்லை பகுதிகளிலும் ஓணம் களை கட்டுவதை காண முடியும். இதன் உச்சக்கட்டமாக செப்., 7 ல் திருவோணம் கொண்டாடப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய விரதங்களில் மிக முக்கியமான ஒன்று பிரதோஷம் விரதம். சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar