Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளாங்கண்ணியில் பேராலய ஆண்டு விழா! தீவனூர் கிராமத்தில் மகா சதுர்த்தி விழா! தீவனூர் கிராமத்தில் மகா சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்து நாள் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் துவங்கியது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஆக
2014
10:08

நாகர்கோவில்: பத்து நாள் தொடர்ச்சியாக நடைபெறும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நேற்று துவங்கியது. இதையொட்டி, வீடுகளிலும், பொது இடங்களிலும் மலர்களால் அத்தப்பூக்களம் அமைக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று திருவோணம். ’காணம் விற்றாவது ஓணம் கொண்டாடு’ என்பது பழமொழி. சிறிய தானியமான காணத்தை விற்றாவது எளிமையாக ஓணம் கொண்டாட வேண்டும் என்பதே இதன் பொருள். கேரளாவின் வசந்த விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. கேரளாவில் குறுநில மன்னனாக, வாய்மை தவறாமல் ஆட்சி செய்து வந்த மகாபலியை சோதிக்க விரும்பிய விஷ்ணு பகவான், வாமன அவதாரம் எடுத்து மன்னனிடம் சென்று 3 அடி நிலம் கேட்டார். ’தருகிறேன்’ என்று மன்னன் சொன்னதும், மலையாக வளர்ந்த விஷ்ணு முதல் அடியில் பூமியையும், 2 வது அடியில் ஆகாயத்தையும் அளந்து விட்டு, 3 வது அடிக்கு நிலம் கேட்ட போது தனது தலையை காட்டி, ’தருகிறேன்’ என சொன்ன சொல்லை காப்பாற்றினார், மகாபலி. அப்போது விஷ்ணுவிடம் கேட்டு பெற்ற வரத்தின் படி, ஆவணி திருவோண நாளில் மக்களை மகாபலி காண வருவதாக நம்பப்படுகிறது. ஆவணி அஸ்தம் நாள் முதல் 10 நாட்கள் இவ்விழா கொண்டாடப்படுகிறது. நேற்று அஸ்தம் பிறந்தை ஒட்டி பத்மனாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் அமைத்து, ஓணத்தை வரவேற்றனர். ஊஞ்சல் ஆடியும், பாட்டு பாடியும் ஓண கொண்டாட்டம் துவங்கியது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பங்கேற்றனர். இனி10 நாட்கள் கேரளாவிலும், அதை ஒட்டியுள்ள தமிழக எல்லை பகுதிகளிலும் ஓணம் களை கட்டுவதை காண முடியும். இதன் உச்சக்கட்டமாக செப்., 7 ல் திருவோணம் கொண்டாடப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar