பதிவு செய்த நாள்
01
செப்
2014
05:09
பழநி: மூன்றாம்படைவீடு என அழைக்கப்படும் பழநி திருஆவினன்குடி கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமபூஜைகள் துவங்கின. கும்பாபிஷேக விழாவில் யாக சாலைகள் அமைப்பதற்காக ஆக.,22 ல் முகூர்த்தகால் நடப்பட்டது. கோயில் மயில் மண்டபம், உட்பிரகாரங்களில் யாகசாலைகள் அமைக்கப்பட்டன. இன்று காலை 5.30 மணிக்கு விநாயகர் அனுமதிபெறுதல், கணபதிஹோமம், மாலை 7 மணிக்கு பலிபூஜை, பிரவேச பலி, சிறப்பு ஹோம பூஜைசெய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. செப்., 2 காலை 8 மணிக்கு விநாயகர்பூஜை, நவக்கிரக ஹோமம், சூரியபகவான் வழிபாடு, 108 தாமரைமலர்களால் நாம அர்ச்சனை , மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையும், செப்., 3 ல் காலை 11 மணிக்கு திருமஞ்சணம் சிறப்புபூஜையும், மாலை 5 மணிக்கு லட்சுமிபூஜை, கன்னியாபூஜைகள் நடக்கிறது. செப்., 4 ல் முதல்கால யாகபூஜைகள் துவங்கி, ஆறுகால யாகபூஜைகள் தொடர்ந்து நடக்கிறது. செப்.,7ல் காலை 6 மணிக்குமேல் 6.45 மணிக்குள், குழந்தைவேலாயுதசுவாமி கோயில், சன்னதிவீதியுள்ள வேளீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்புடைய கோயில்கள் :