சாயல்குடி : சாயல்குடியில் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முக்கிய தெருக்களின் வழியாக அம்மன் வீதியுலா சென்றார். பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர். ஊர்வலம் கோயிலை அடைந்ததும் பெண்கள் பூக்களை தூவி அம்மனை வழிபட்டனர்.