சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சீதையை ராவணன் கடத்தியதால் துன்பத்தில் ஆழ்ந்திருந்தார் ராமர்.அவரைக் காண வந்த நாரதர், பராசக்தியின் பெருமையை எடுத்துஉரைத்து நவராத்திரி பூஜை செய்யும்படி உபதேசித்தார். அதன் பயனாக, நவராத்திரி விரதமிருந்த ராமன், ராவணனை வதம்செய்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. ராமா! மூவுலகிற்கும் ஆதாரமாக இருப்பவள் பராசக்தி. சரண்அடைந்தவர்களின் துன்பம் போக்கும் அம்பிகையை பூஜித்தால் உன்வ வாழ்விலும் நன்மை உண்டாகும். அந்த பூஜையை உனக்காக நானே முன்னின்று நடத்திவைக்கிறேன்! என்றார்நாரதர். இதற்காக, மஹாளய அமாவாசை கழிந்த 6வது திதியான வளர்பிறை சஷ்டியன்று அனுமன்மூலம் பூஜைப் பொருட்களை வரவழைத்த ராமர், துர்க்காஷ்டமியன்று தேவியை வழிபட்டு பலம் பெற்றார். விஜயதசமி நாளில் சீதையை அசோக வனத்தில் இருந்து மீட்டார்.