Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெட்டவெளியில் காயும் சிறுவாக்கம் ... திருப்பதி ஏழுமலையான் தரிசனம் இன்று 6 மணி நேரம் ரத்து! திருப்பதி ஏழுமலையான் தரிசனம் இன்று 6 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீட்டஞ்சேரியில் சீரழியும் கோவில் மண்டபம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 செப்
2014
11:09

உத்திரமேரூர்: சீட்டஞ்சேரி கிராமத்தில்,  சீரழிந்து வரும் கோவில் மண்டபத்தை பராமரித்து பாதுகாத்திட, அப்பகுதிவாசிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது, சீட்டஞ்சேரி கிராமம். ஒரு காலத்தில், இப்பகுதியில் கிருஷ்ணர்  வலம் வந்ததாகவும், அப்போது, இக்கிராமத்திற்கு கிருஷ்ணரால் நல்லாசி வழங்க பட்டுள்ளதாகவும் இப்பகுதிவாசிகள் நம்புகின்றனர்.  இதனால்,  இந்த கிராமத்திற்கு கிருஷ்ணபுரி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இப்பகுதியில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான, பழமை வாய்ந்த  காளீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.  இக்கோவிலுக்கு அருகில், கல் மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஓய் வெடுக்கவும், கோவில் தேர் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தவும் இந்த மண்டபம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில  ஆண்டுகளாக, இந்த மண்டபம் பராமரிப்பு இல்லாமல் சீரழிந்து வருகிறது. மண்டபத்தின் மேல் பகுதிகளில் ஆங்காங்கே மரக்கன்றுகள் வளர்ந்து,  அதன் வேர்கள் கட்டட சுவரில் புகுந்துள்ளது. இதனால், கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில்,  இந்த மண்டபத்தில் இப்பகுதி, குடி’மகன்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, பழமையான இந்த கல்  மண்டபத்தை சீரமைத்து, பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலைப்பகுதியில் மழை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா 7ம் நாள் தேரோட்டத்தில் முதலில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் செம்பை சங்கீத உற்ஸவம் நடந்தது.குருவாயூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar